பதிவு செய்த நாள்
01 நவ2012
01:18
புதுடில்லி : நடப்பு வேளாண் பருவத்தில், ( ஜூலை-ஜூன்), இந்தியாவில் நெல் உற்பத்தி, 9.90 கோடி டன்னாக சரிவடையும் என, அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. இது, கடந்த வேளாண் பருவத்தை விட (10.43 கோடி டன்) 5 சதவீதம் குறைவாகும். இந்தியாவில், பல மாநிலங்களில், அதிக மகசூல் அளிக்க கூடிய நெல் ரகங்கள், சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால், நெல் உற்பத்தி 10 லட்சம் டன் அதிகரிக்கும். என்றாலும், ஒட்டு மொத்த அளவில், இந்தியாவின் நெல் உற்பத்தி 9.90 கோடி டன்னாகத் தான் இருக்கும்.
நாட்டின் பல மாநிலங்களில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கரீப் பருவத்தில், குறைந்த மழைப் பொழிவால், நெல் உற்பத்தி குறையும் என, அரசின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், நடப்பு வேளாண் பருவத்தில், நெல் உற்பத்தி 46.51 கோடி டன்னாக இருக்கும் என்றும், இது, கடந்த வேளாண் பருவத்தை விட, சற்று அதிகமாக (46.49 கோடி டன்) இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|