காபி உற்பத்தி குறையும்காபி உற்பத்தி குறையும் ... கேரளாவில் கோழி விலை உயர்ந்தது கேரளாவில் கோழி விலை உயர்ந்தது ...
கச்சா பாமாயில் விலை குறைய வாய்ப்பு:இந்தோனேஷியா ஏற்றுமதி வரியை குறைத்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2012
01:29

மும்பை : இந்தோனேஷியா அரசு, கச்சா பாமாயிலுக்கான ஏற்றுமதி வரியை குறைத்துள்ளது. இதனால், இதன் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியா அரசு, கச்சா பாமாயில் ஏற்றுமதி மீதான வரியை, 9 சதவீதமாக குறைத்துள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்போது, கச்சா பாமாயில் ஏற்றுமதிக்கு 13.5 சதவீதம் வரி விதிக்கப் படுகிறது.
வரி குறைப்பால், இதன் விலை, கிலோவுக்கு, ஐந்து ரூபாய் வரை குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.எண்ணெய் உற்பத்திஉள்நாட்டில், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, சமையல் எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நம் நாடு மிக அதிக அளவில், கச்சா பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது, உள்நாட்டில், தாவர எண்ணெய்க்கான தேவை, 1.55 கோடி டன்னாக உள்ளது. இந்தியா, 90 லட்சம் டன்னுக்கும் அதிகமாக, தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து வருகிறது.
குறிப்பாக, இந்தோனேஷியாவிலிருந்து தான், மிக அதிக அளவில் தாவர எண்ணெய் வகை கள், இறக்குமதியாகின்றன. கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டுள்ள தால், இது, இந்திய நுகர்வோருக்கு மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என, இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஏற்றுமதி வரி இந்தோனேஷியா அரசு, கச்சா பாமாயில் ஏற்றுமதியை குறைக்கும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இதன் ஏற்றுமதி மீதான வரியை, 19 சதவீதமாக உயர்த்தியது. அதேசமயம், அந்நாட்டின் சுத்திகரிப்பு எண்ணெய் நிறுவனங்கள், பயன் அடையும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான வரியை, 9 சதவீதமாக குறைத்தது.
இது, இந்திய தாவர எண்ணெய் சுத்திகரிப்பு துறையை பாதித்தது. உலகளவில், பாமாயில் உற்பத்தியில், இந்தோனே ஷியா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, ஒவ்வொரு மாதமும், சர்வதேச நிலவரத்திற்கேற்ப பாமாயிலின் ஏற்றுமதி விலையை மாற்றி அமைத்து வருகிறது. இறக்குமதி நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), செப்டம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, கடந்த பருவத்தின் இதே காலத்தை விட, 17.80 சதவீதம் அதிகரித்து, 77.74 லட்சம் டன்னிலிருந்து, 91.57 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 9.12 லட்சம் டன்னிலிருந்து, 9.94 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 9.76 லட்சம் டன்னாகவும், இதர எண் ணெய் வகைகளின் இறக்குமதி, 17,495 டன்னாகவும் இருந்தது. நடப்பு எண்ணெய் பருவத்தில், இந்தோனேஷியாவின் கச்சா பாமாயில் உற்பத்தி, 6-10 சதவீதம் அதிகரித்து, 2.50 - 2.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப் பட்டுஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)