பதிவு செய்த நாள்
01 நவ2012
01:29
மும்பை : இந்தோனேஷியா அரசு, கச்சா பாமாயிலுக்கான ஏற்றுமதி வரியை குறைத்துள்ளது. இதனால், இதன் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியா அரசு, கச்சா பாமாயில் ஏற்றுமதி மீதான வரியை, 9 சதவீதமாக குறைத்துள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்போது, கச்சா பாமாயில் ஏற்றுமதிக்கு 13.5 சதவீதம் வரி விதிக்கப் படுகிறது.
வரி குறைப்பால், இதன் விலை, கிலோவுக்கு, ஐந்து ரூபாய் வரை குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.எண்ணெய் உற்பத்திஉள்நாட்டில், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, சமையல் எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நம் நாடு மிக அதிக அளவில், கச்சா பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது, உள்நாட்டில், தாவர எண்ணெய்க்கான தேவை, 1.55 கோடி டன்னாக உள்ளது. இந்தியா, 90 லட்சம் டன்னுக்கும் அதிகமாக, தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து வருகிறது.
குறிப்பாக, இந்தோனேஷியாவிலிருந்து தான், மிக அதிக அளவில் தாவர எண்ணெய் வகை கள், இறக்குமதியாகின்றன. கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டுள்ள தால், இது, இந்திய நுகர்வோருக்கு மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என, இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஏற்றுமதி வரி இந்தோனேஷியா அரசு, கச்சா பாமாயில் ஏற்றுமதியை குறைக்கும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இதன் ஏற்றுமதி மீதான வரியை, 19 சதவீதமாக உயர்த்தியது. அதேசமயம், அந்நாட்டின் சுத்திகரிப்பு எண்ணெய் நிறுவனங்கள், பயன் அடையும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான வரியை, 9 சதவீதமாக குறைத்தது.
இது, இந்திய தாவர எண்ணெய் சுத்திகரிப்பு துறையை பாதித்தது. உலகளவில், பாமாயில் உற்பத்தியில், இந்தோனே ஷியா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, ஒவ்வொரு மாதமும், சர்வதேச நிலவரத்திற்கேற்ப பாமாயிலின் ஏற்றுமதி விலையை மாற்றி அமைத்து வருகிறது. இறக்குமதி நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), செப்டம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, கடந்த பருவத்தின் இதே காலத்தை விட, 17.80 சதவீதம் அதிகரித்து, 77.74 லட்சம் டன்னிலிருந்து, 91.57 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 9.12 லட்சம் டன்னிலிருந்து, 9.94 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 9.76 லட்சம் டன்னாகவும், இதர எண் ணெய் வகைகளின் இறக்குமதி, 17,495 டன்னாகவும் இருந்தது. நடப்பு எண்ணெய் பருவத்தில், இந்தோனேஷியாவின் கச்சா பாமாயில் உற்பத்தி, 6-10 சதவீதம் அதிகரித்து, 2.50 - 2.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப் பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|