கச்சா பாமாயில் விலை குறைய வாய்ப்பு:இந்தோனேஷியா ஏற்றுமதி வரியை குறைத்ததுகச்சா பாமாயில் விலை குறைய வாய்ப்பு:இந்தோனேஷியா ஏற்றுமதி வரியை குறைத்தது ... இந்திய ரூபாயின் மதிப்பு  உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
கேரளாவில் கோழி விலை உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2012
01:36

வெளி மாநில கோழிகளுக்கு, கேரள அரசு தடை விதித்துள்ளதால், அதன் விலை கிடு கிடு.. வென உயர்ந்து வருகிறது.தமிழகம், கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்துதான் கேரளாவிற்கு, அதிக அளவிலான கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
பறவை காய்ச்சல் கேரளாவில் விற்பனையாகும் கோழிகளில், வெளி மாநிலங்களின் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம், பெங்களூரு அருகே ஹேசரகட்டாவில், பறவைக் காய்ச்சல் காரணமாக, 4,265 வான் கோழிகள் இறந்தன. இதையடுத்து, வெளி மாநில கோழிகளை கேரளாவிற்கு கொண்டு வர, அம்மாநில அரசு சென்ற திங்களன்று தடை விதித்தது. இதனால், கேரளாவில் உள்ளுர் கோழிகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக, கோழி விலை மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான, உயிருள்ள கோழியின் விலை, தற்போது 86 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மேலும் அதிகரிக்கும் என, கோழி வியாபாரிகள் தெரிவித்தனர். சென்ற 2011ம் ஆண்டு புள்ளி விவரப்படி, கேரளாவில் 6,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு மாமிச உணவுகள் விற்பனையாகிஉள்ளன.
கோழி இறைச்சி:கேரள மக்கள், நாளொன்றுக்கு, 5,000 டன் மாமிசம் உண்பதாக, கால்நடை துறை மதிப்பிட்டுள்ளது. இதில், 45 சதவீதம் கோழி இறைச்சி என, கேரள அரசு கணித்துள்ளது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், கேரள மக்கள், கோழி இறைச்சிக்காக 2,844 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். இதில், 1,752 கோடி ரூபாய் அளவிலான தொகை, வெளிமாநில கோழிப் பண்ணையாளர்களுக்கு சென்றுள்ளது. தற்போது, வெளி மாநில கோழிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால், கேரள எல்லைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)