பதிவு செய்த நாள்
01 நவ2012
01:36
வெளி மாநில கோழிகளுக்கு, கேரள அரசு தடை விதித்துள்ளதால், அதன் விலை கிடு கிடு.. வென உயர்ந்து வருகிறது.தமிழகம், கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்துதான் கேரளாவிற்கு, அதிக அளவிலான கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
பறவை காய்ச்சல் கேரளாவில் விற்பனையாகும் கோழிகளில், வெளி மாநிலங்களின் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம், பெங்களூரு அருகே ஹேசரகட்டாவில், பறவைக் காய்ச்சல் காரணமாக, 4,265 வான் கோழிகள் இறந்தன. இதையடுத்து, வெளி மாநில கோழிகளை கேரளாவிற்கு கொண்டு வர, அம்மாநில அரசு சென்ற திங்களன்று தடை விதித்தது. இதனால், கேரளாவில் உள்ளுர் கோழிகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக, கோழி விலை மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான, உயிருள்ள கோழியின் விலை, தற்போது 86 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மேலும் அதிகரிக்கும் என, கோழி வியாபாரிகள் தெரிவித்தனர். சென்ற 2011ம் ஆண்டு புள்ளி விவரப்படி, கேரளாவில் 6,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு மாமிச உணவுகள் விற்பனையாகிஉள்ளன.
கோழி இறைச்சி:கேரள மக்கள், நாளொன்றுக்கு, 5,000 டன் மாமிசம் உண்பதாக, கால்நடை துறை மதிப்பிட்டுள்ளது. இதில், 45 சதவீதம் கோழி இறைச்சி என, கேரள அரசு கணித்துள்ளது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், கேரள மக்கள், கோழி இறைச்சிக்காக 2,844 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். இதில், 1,752 கோடி ரூபாய் அளவிலான தொகை, வெளிமாநில கோழிப் பண்ணையாளர்களுக்கு சென்றுள்ளது. தற்போது, வெளி மாநில கோழிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால், கேரள எல்லைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|