பதிவு செய்த நாள்
02 நவ2012
03:27
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 1.53 லட்சம் கோடி ரூபாயாக (2,781 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 1.70 லட்சம் கோடி ரூபாயாக (3,089 கோடி டாலர்) அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 8.2 சதவீத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன. இந்நாடுகளின் பொருளாதார மந்த நிலை காரணமாகவே, இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சரிவைக் கண்டுள்ளது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர், அமன் சதா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|