பதிவு செய்த நாள்
02 நவ2012
03:29
புதுடில்லி: உலகளவில், நிதி நிர்வாக மேம்பாடு மற்றும் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளில், இந்தியா 40வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, இந்த பட்டியலில், இந்தியா 36வது இடத்தில் இருந்தது. இதன்படி, நடப்பாண்டில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 62 நாடுகளில், இந்தியா, 40வது இடத்தை பிடித்துள்ளது என, உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தங்களை சரிவர நிறைவேற்றாமல் இருப்பது, மிக குறைந்த அளவிலான தாராளமயமாக்கல் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறையில் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்றவற்றால், இந்தியா பின்தங்கியுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், 15 நாடுகளின் பொருளாதாரத்தை பொறுத்தவரை, இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. வங்கி சாரா நிதி சேவைகளில், இந்தியா, ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ள போதிலும், வங்கி சார்ந்த நிதி சேவைகளில், 45வது இடத்தையே பிடித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|