பதிவு செய்த நாள்
02 நவ2012
03:30
புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 5.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், 2.5 சதவீதம் என்ற அளவிலும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 2.3 சதவீதம் என்ற அளவிலும் மிகவும் குறைவாக இருந்தது.
சென்ற செப்டம்பர் மாதத்தில், நிலக்கரி உற்பத்தி, 21.4 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், மைனஸ் 18.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது. மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி வளர்ச்சி, 0.1 சதவீதம் என்ற அளவிலிருந்து, மைனஸ் 1.7 சதவீதமாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 6.4 சதவீதம் என்ற அளவிலிருந்து, மைனஸ் 14.8 சதவீதமாகவும் குறைந்துள்ளன. அதேசமயம், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி, 4.3 சதவீதத்திலிருந்து, 11.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
உரத் துறையின் உற்பத்தி, மைனஸ் 2.1 சதவீதத்திலிருந்து, 5.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சிகண்டுள்ளது. உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.5 சதவீதத்திலிருந்து, 2 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.8 சதவீதத்திலிருந்து, 3.7 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.
இருப்பினும், சிமென்ட் துறையின் உற்பத்தி, 2.2 சதவீதத்திலிருந்து, 13.4 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், 5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|