முக்கிய எட்டு துறைகள் 5.1 சதவீதம் வளர்ச்சிமுக்கிய எட்டு துறைகள் 5.1 சதவீதம் வளர்ச்சி ... கட்டமைப்பு துறையில் 1லட்சம் கோடி டாலர் முதலீடு கட்டமைப்பு துறையில் 1லட்சம் கோடி டாலர் முதலீடு ...
கேரளாவின் தடையால் முட்டை, கோழி விலை சரியும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
03:31

நாமக்கல்: தமிழக முட்டை மற்றும் கோழிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், கேரளாவுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை, நான்காம் நாளாக நீடிப்பதால், நாமக்கல்லில், பல கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதனால், முட்டை மற்றும் இறைச்சிக் கோழியின் விலை சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஹெசர்பெட்டாவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில், பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. அந்நோய் தாக்கத்தால், 3,400 வான் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதனால், கர்நாடக மாநிலத்தில் இருந்து, கேரளாவுக்கு செல்லும் முட்டை மற்றும் கோழிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் அனைத்தும், அம்மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அதுபோல், தமிழக முட்டை மற்றும் கோழிகளுக்கும், கேரளா மாநில அரசு, கடந்த, 29ம் தேதி தடை விதித்தது. அதனால், தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்குச் செல்லும் முட்டை லாரிகள் அனைத்தும், நான்கு நாட்களாக, கேரள மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அதனால், பலகோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதுபோல், லட்கணக்கான முட்டைக் கோழி, கறிக்கோழியும் தேக்கமடைந்துள்ளன. அதன் எதிரொலியாக, தமிழகத்தில், முட்டை மற்றும் முட்டைக் கோழி, கறிக்கோழி விலை சரியும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே, "தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், பறவைக் காய்ச்சல் இல்லை. எனவே, தமிழக முட்டை, முட்டைக் கோழி, கறிக்கோழி ஆகியவற்றை ஏற்றி வரும் லாரிகளை, கேரளாவுக்குள் செல்ல, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நலச்சங்கத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது: தமிழக கால்நடை பராமரிப்புதுறை செயலர் மூலம் கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர் களிடம் சான்றிதழ் பெற்று வரும் முட்டை லாரிகள் அனுமதிக்கப்படும் என, அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறை செயலர் தெரிவித்தாக கூறப்படுகிறது. எனினும், அம்மாநில அரசு உத்தரவு தங்களுக்கு வரவில்லை எனக்கூறி, கேரள சோதனை சாவடிகளில், தமிழக முட்டை லாரிகள் அனுமதிக்கப்படாமல், அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கோழி கறி விலை, சேலம், ஈரோட்டில் கிலோவுக்கு, 35 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)