கேரளாவின் தடையால் முட்டை, கோழி விலை சரியும் அபாயம்கேரளாவின் தடையால் முட்டை, கோழி விலை சரியும் அபாயம் ... நாட்டின் வாகன விற்பனையில் முன்னேற்றம் நாட்டின் வாகன விற்பனையில் முன்னேற்றம் ...
கட்டமைப்பு துறையில் 1லட்சம் கோடி டாலர் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
03:35

புதுடில்லி: அடிப்படை கட்டமைப்பு துறையில், 1 லட்சம் கோடி டாலர் முதலீட்டு இலக்கை எட்ட, அரசு பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு, நேற்று டில்லியில், பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் பேசினார். அதன் விவரம் வருமாறு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், "ஆதார்' திட்டம் என, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு கொள்கை திட்டங்களை வகுத்து செயல்

படுத்தி வருகிறது. இது, சீரிய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, சமூகத்தின் செலவிடும் திறனை உயர்த்தியுள்ளது. இத்தகைய வெற்றிகளுக்கு நாம் நியாயப்படி பெருமைப்பட்டுக் கொண்டாலும், சர்வதேச பொருளாதார நெருக்கடியால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் உணர வேண்டும். இதனால், நமது வளர்ச்சி குன்றியுள்ளது. ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மிகவும் அதிகரித்துள்ள நிதிப்பற்றாக்குறை, கவலை அளிக்கக்கூடியதாகவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாகவும் உள்ளது. நமது எதிர்கால வளர்ச்சி குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. நம் முன் உள்ள சவால்களை மிகுந்த வலிமையோடு சமாளித்து, இலக்கை அடைய வேண்டும். நாட்டை கட்டிக்காப்பதில் நமக்கும் பங்குண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நம் முன் உள்ள சிக்கலான பிரச்னைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், அடிப்படை கட்டமைப்பு துறையில் 1 லட்சம் கோடி டாலர் (55 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ள, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முதலீடுகளுக்கு பல்வேறு பிரச்னைகள் தடையாக உள்ளன. குறிப்பாக, எரிபொருள் வினியோகம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி, நிதி போன்றவற்றை கூறலாம்.
எரிபொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதுவே, நமது முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. நிர்ணயித்த இலக்கை அடைய, நாம் துணிவோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படுவோம். இந்த அரசுக்கு உள்ள காலத்திற்குள், ஒவ்வொருவரும், முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க தீவிரமாக செயல்படுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஆற்றல்மிக்க, இளைஞர்களுக்கு, மூத்த அமைச்சர்கள் பணிகளை ஒதுக்கித் தர வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)