பதிவு செய்த நாள்
02 நவ2012
10:13
மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(02.11.12) மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 161 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில், முதன் முறையாக, சீனாவின் தயாரிப்பு துறையின் உற்பத்தி நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை உயர்ந்துள்ளது என்ற நிலைப்பாட்டாலும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 160.74 புள்ளிகள் உயர்ந்து 18,722.44 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 44.85 புள்ளிகள் உயர்ந்து 5,689.90 என்ற அளவிலும் இருந்தது.
இந்திய பங்குசந்தைகள் போன்றே ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங் மற்றும் ஜப்பான் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கி இருக்கிறது.
இந்திய பங்குசந்தை உயர்வுடன் ஆரம்பித்து இருப்பது போலவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 10 பைசா உயர்ந்துள்ளது. நேற்று ரூ.53.70 இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை ரூ.53.60-ஆக உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|