பதிவு செய்த நாள்
02 நவ2012
12:58
புதுடில்லி : நடப்பாண்டில் விப்ரோ நிறுவனத்தின் 2ம் காலாண்டு லாபம் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ நிறுவனம். இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான 2ம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் அந்நிறுவனத்தின் லாபம் ரூ.1,610.60 கோடியாக உள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.1,300.90 கோடியாக இருந்தது. இதேப்போல் இந்நிறுவனத்தின் மொத்த வருமானமும் 17.16 சதவீதம் உயர்ந்து ரூ.10,620.30 கோடியாக உள்ளது. கடந்தாண்டு ரூ.9,064.50 கோடியாக இருந்தது.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் ஐ.டி., பிசினஸ் தவிர மற்ற தொழில்கள் அனைத்தும் தனியாக பிரிக்கப்பட்டு அது ஒரு குழுமமாக செயல்படும் என இந்நிறுவனத்தின் தலைவர் ஆசிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|