பதிவு செய்த நாள்
02 நவ2012
14:52
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-2 விற்பனை 3 மில்லியனை தாண்டியுள்ளது. ஸ்மார்ட் போன் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது சாம்சங் நிறுவனம். ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்துக்கும், சாம்சங் நிறுவனத்துக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இருந்தும் விற்பனையில் சாம்சங் நிறுவனமே முதலிடம் வகிக்கிறது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-2 ரக போன் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை 3மில்லியன் போன்கள் விற்பனையாகியுள்ளன. அனைத்து ரக அம்சங்களும், 5.5 இன்ச் பெரிய திரையும், டிஜிட்டல் பென் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளது. இதனால் இந்தரக போன்கள் உலகளவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அதனால் தான் இந்தளவுக்கு இந்தரக போன்கள் விற்பனையாகி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நடப்பாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை சாம்சங் நிறுவனம் 56.3 மில்லியன் போன்களை விற்பனை செய்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆப்பிள் நிறுவனம் 26.9 மில்லியன் போன்களை விற்பனை செய்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|