பதிவு செய்த நாள்
03 நவ2012
00:48
புதுடில்லி: நாட்டின் மிகப் பழமையான. அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க, தனி முதலீட்டு பிரிவு அமைக்கப்பட உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின் முதலீடு சார்ந்த பணிகளை, வெளியாரிடம் ஒப்படைக்க கூடாது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, அஞ்சலக ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ.,), ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு (ஆர்.பி.எல்.ஐ.,) ஆகிய திட்டங்கள் வாயிலான தொகையை, பல்வேறு நிதியினங்களில் முதலீடு செய்ய, தனி முதலீட்டு பிரிவு அமைக்கப்பட உள்ளது.
தற்போது, பி.எல்.ஐ., மற்றும் ஆர்.பி.எல்.ஐ., திட்டங்களில் திரட்டப்படும் நிதியை, எஸ்.பீ.ஐ. பண்ட்ஸ் மானேஜ்மென்ட் மற்றும் யூ.டி.ஐ. அசெட் மானேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. இதன்படி, சென்ற 2011-12ம் நிதியாண்டில் பி.எல்.ஐ., மற்றும் ஆர்.பி.எல்.ஐ., திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு, முறையே 23,010 கோடி ரூபாய் மற்றும் 9,141 கோடி ரூபாய் ஆக, உள்ளது. இந்தியாவில், அஞ்சலக ஊழியர்களின் நலனுக்காக, 1884ம் ஆண்டு, முதன் முதலாக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 1888ம் ஆண்டு, தந்தி துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
அச்சமயம், சில நூறாக இருந்த காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கை, சென்ற 2011-12ம் நிதியாண்டு நிலவரப்படி, 50.07 லட்சமாக உயர்ந்துள்ளது. அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோருக்கானவை ஆகும். ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம், கடந்த 1993ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற மக்களிடம் காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு காப்பீட்டு வசதியை அளிக்கவும், இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, நலிவுற்ற பிரிவினர், பெண் பணியாளர்கள் ஆகியோரை இலக்காக கொண்டு, இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சென்ற 2011-12ம் நிதியாண்டு நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 135.47 லட்சம் பாலிசிதாரர்கள் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|