பதிவு செய்த நாள்
10 நவ2012
04:14
வே.பாளையம்:
தீபாவளி நெருங்குவதையொட்டி, இனிப்பு பலகாரம் செய்யும் பணிகள்
தீவிரமடைந்துள்ளதால், வெல்லம் விலை உயர்ந்து உள்ளது. இதனால் கரும்பு
விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உருண்டை வெல்லம் கரூர் மாவட்டத்தில் விளையும் கரும்புகள், சர்க்கரை ஆலை
மற்றும் நொய்யல் சுற்றுப்பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கும்
விற்பனை செய்யப்படுகின்றன.வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உருண்டை வெல்லம்,
அச்சு வெல்லம் ஆகியவை தயார் செய்யப்படுகின்றன. 30 கிலோ எடை கொண்ட
சிப்பங்களாக தயாரித்து, நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் ஏல
மார்க்கெட்டில், வெல்லம் ஏலம் விடப்படுவது வழக்கம்.இதில், கரூர், நாமக்கல்,
சேலம், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து
கொள்வர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்தராஞ்சல், சத்தீஸ்கர் என,
வெளிமாநிலங்களுக்கும் வெல்லம் அனுப்பி வைக்கப்படுகிறது ஒவ்வொரு வாரமும்
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை, 11 மணி முதல் மாலை வரை ஏலம்
நடைபெறுகிறது. கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம், ஒரு சிப்பம்,
1,150 ரூபாய்க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம், 1,400 ரூபாய்க்கும் ஏலம்
போனது.
இந்த வாரம் உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,500 ரூபாய்க்கும், அச்சு
வெல்லம் ஒரு சிப்பம், 1,700 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஏல சந்தைக்கு உருண்டை
வெல்லம், 8,000 சிப்பமும், அச்சு வெல்லம், 5,000 சிப்பமும் விற்பனைக்கு
வந்தன.வெல்லம் விலை தற்போது தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஒரு டன் கரும்பு,
2,700 ரூபாய் வரை விலை போகிறது. இதனால் கரும்பு விவசாயிகள்
மகிழ்சியடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|