பதிவு செய்த நாள்
11 நவ2012
02:37
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், ரயில்வே துறையின் வருவாய், 68,671 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தை (57,360 கோடி ரூபாய்) விட, 19.72 சதவீதம் அதிகமாகும் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சரக்குகள் கையாண்டதன் வாயிலான வருவாய், 38,090 கோடியிலிருந்து, 47,386 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், 10.49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 16,306 கோடியிலிருந்து, 18,017 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதர வகையிலான வருவாய், 10.10 சதவீதம் உயர்ந்து, 1,619 கோடியிலிருந்து, 1,783 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், அக்டோபர் வரையிலுமாக, ரயில்களில், முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, 3.85 சதவீதம் அதிகரித்து, 481 கோடியிலிருந்து, 500 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|