பதிவு செய்த நாள்
11 நவ2012
02:41
புதுடில்லி: நடப்பு பருவத்தில், சென்ற 8ம் தேதி வரையிலுமாக, நாட்டின் நெல் கொள்முதல், 1.07 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தின், இதே காலத்தில், 94 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என, மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரையிலுமாக மேற்கொள்ளப்பட்ட, நெல் கொள்முதலில், பஞ்சாப் மாநிலம், 76 லட்சம் டன் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைஅடுத்து, அரியானா (24.10 லட்சம் டன்), ஆந்திரா (33,483 டன்), சண்டிகர் (11,256 டன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.சென்ற 1ம் தேதி வரையிலுமாக, மத்திய அரசின் கிடங்குகளில், உணவு தானியங்கள் கையிருப்பு, 6.95 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதில், கோதுமையின் பங்களிப்பு, 4 கோடி டன் என்ற அளவிலும், நெல் பங்களிப்பு, 2.89 கோடி டன் என்ற அளவிலும் உள்ளன.சென்ற அக்டோபர் மாதம், 1ம் தேதி நிலவரப்படி, நெல் கையிருப்பு, 77 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு மாதம் 1ம் தேதி வரையிலுமாக, நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|