நாட்டின் நெல் கொள்முதல் ஒரு கோடி டன்னை தாண்டியதுநாட்டின் நெல் கொள்முதல் ஒரு கோடி டன்னை தாண்டியது ... "பறக்குது' தங்கம் விலை! - நமது நிருபர் - "பறக்குது' தங்கம் விலை! - நமது நிருபர் - ...
அரிசி விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2012
02:43

சேலம்: தமிழகத்தில், மின்தடை காரணமாக, அரிசி உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை, குவிண்டாலுக்கு, 200 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.தமிழகத்தில், நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், நெல்லுக்கான கொள்முதல் விலையை, அரசு உயர்த்தியதன் எதிரொலியாக, அரிசி விலை உச்சத்தை எட்டி உள்ளது.தமிழக அரசு, கடந்த மாதம், ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 50 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு, 70 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும் என, அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின், சாதாரண நெல்லின் கொள்முதல் விலை, 1,300 ரூபாயாகவும், சன்னரக நெல்லின் கொள்முதல் விலை, 1,350 ரூபாயாகவும் இருந்தது.

நெல் விலை உயர்ந்த நிலையில், அரிசி விலை, தற்போது அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி, மின்தடை காரணமாக, தமிழகத்தில் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டு வந்த, 7,332 அரிசி ஆலைகளில், 25 சதவீத ஆலைகளில் மட்டுமே உற்பத்தி நடக்கிறது.அந்த ஆலைகளும் மின்சாரத்துக்கு மாற்றாக, டீசலை பயன் படுத்தி, ஜெனரேட்டர் மூலம் அரிசி உற்பத்தியில் ஈடுபடுவதால், அரிசி விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வெள்ளை பொன்னி அரிசி பழசு, கிலோ, 49 முதல், 50 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. பாபத்லா பொன்னி அரிசி விலை, 46 முதல் 48 ரூபாய் வரையும், கர்நாடக பொன்னி அரிசி,43 முதல், 45 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. அரிசி வியாபாரி சதீஷ் கூறியதாவது:தமிழகத்தில், அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட, "நீலம்' புயலின் தாக்கம் காரணமாக, காரைக்குடி, வேதாரண்யம், நாகை மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியதால், நெல் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்து கொண்ட வியாபாரிகள், இருப்பு நெல்லை விற்பனைக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி, மின்தடை காரணமாக அரிசி உற்பத்தியில் ஏற்படும் கூடுதல் செலவை, அரிசி விலையில் ஏற்றுவதால், விலை உயர்ந்துள்ளது.அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து, தமிழக அரசு வரவழைத்துள்ள அரிசிக்கு, மக்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை. இதன் காரணமாக, தற்போது அரிசி விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)