பதிவு செய்த நாள்
11 நவ2012
02:44
தங்கம் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மக்கள், விலை உயர்வையும், பொருட்படுத்தாமல், தங்கம் வாங்குவதால், இதன் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.சென்ற செப்டம்பர் 8ம் தேதி, வரலாற்றில் முதல் முறையாக, 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை, 3,022 ரூபாயாக உயர்ந்தது. ஒரு சவரன், 24 ஆயிரம் ரூபாயை தாண்டியது.இந்தியாவில், தங்கம் பயன்பாட்டில், தமிழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
சென்னையில், தற்போது, நாள்தோறும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 கிலோ, தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.தீபாவளியை முன்னிட்டு, பல நிறுவனங்கள், போட்டி போட்டு, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதனால், தீபாவளியன்று, தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சுப தினங்களில், விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற முதலீடுகளை காட்டிலும், பாதுகாப்பான முதலீடாக தங்கம் திகழ்வதே இதற்கு காரணம்.
வட மாநிலங்களில், தீபாவளிக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு, "தந்தராஸ்' பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நாளில், வெள்ளி அதிக அளவில் விற்பனையாகும். நாள்தோறும் விற்பனையாகும், சராசரி அளவை விட, தீபாவளியின் போது, தங்கம் விற்பனை, கூடுதலாக 40 சதவீதம், அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சலானி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|