அரிசி விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்புஅரிசி விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பு ... பருத்தி உற்பத்தி 3.54 கோடி பொதிகளாக இருக்கும் பருத்தி உற்பத்தி 3.54 கோடி பொதிகளாக இருக்கும் ...
"பறக்குது' தங்கம் விலை! - நமது நிருபர் -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2012
02:44

தங்கம் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மக்கள், விலை உயர்வையும், பொருட்படுத்தாமல், தங்கம் வாங்குவதால், இதன் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.சென்ற செப்டம்பர் 8ம் தேதி, வரலாற்றில் முதல் முறையாக, 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை, 3,022 ரூபாயாக உயர்ந்தது. ஒரு சவரன், 24 ஆயிரம் ரூபாயை தாண்டியது.இந்தியாவில், தங்கம் பயன்பாட்டில், தமிழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

சென்னையில், தற்போது, நாள்தோறும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 கிலோ, தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.தீபாவளியை முன்னிட்டு, பல நிறுவனங்கள், போட்டி போட்டு, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதனால், தீபாவளியன்று, தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சுப தினங்களில், விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற முதலீடுகளை காட்டிலும், பாதுகாப்பான முதலீடாக தங்கம் திகழ்வதே இதற்கு காரணம்.

வட மாநிலங்களில், தீபாவளிக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு, "தந்தராஸ்' பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நாளில், வெள்ளி அதிக அளவில் விற்பனையாகும். நாள்தோறும் விற்பனையாகும், சராசரி அளவை விட, தீபாவளியின் போது, தங்கம் விற்பனை, கூடுதலாக 40 சதவீதம், அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சலானி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)