பதிவு செய்த நாள்
12 நவ2012
01:23
மும்பை: நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.54 கோடி பொதிகள் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், பருத்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்தியாவில், நடப்பு வேளாண் பருவத்தில், பருவ மழை குறைந்துஉள்ளது.
இதனால், பருத்தி பயிரிடும் பரப்பளவு, முந்தைய ஆண்டை விட, 3 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில், கையிருப்பில் உள்ள பருத்தியையும் சேர்த்து இதன் அளிப்பு, 4.17 கோடி பொதிகள் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், உள்நாட்டில், இதன் பயன்பாடு, 2.66 கோடி பொதிகள் என்ற அளவில் தான் இருக்கும் என,தெரியவந்துள்ளது. இதையடுத்து, 1.51 கோடி பருத்தி பொதிகள் உபரியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|