பதிவு செய்த நாள்
12 நவ2012
01:25
சிவகங்கை: தஞ்சாவூரில் இருந்து நெல் வரத்து உயர்ந்துள்ளதால், சந்தையில் அரிசி விலை குறைந்துஉள்ளது.தமிழகத்தில், காங்கேயம், சிவகங்கை அருகே புதுவயல், கோவை ஆகிய இடங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தஞ்சாவூரில் இருந்து நெல் வரத்து இருக்கும். தற்போது,பிற மாநில நெல்லை விட, தஞ்சாவூரில் இருந்து, நெல் வரத்து அதிகரித்துள்ளது. மூட்டை (61 கிலோ) 1,100 ரூபா# விற்ற, நெல், 900 ரூபாய் வரை குறைந்துவிட்டது. இதனால், அரிசி சந்தைகளிலும், விலை குறைந்துவிட்டது.
விலை: (கிலோ ரூபாயில்): கல்சர் பொன்னி புதுசு - 29, பழையது 30; அதிசய பொன்னி புதுசு- 30, பழையது 32; இட்லி அரிசி (சி.ஆர்.,)- 30; வெள்ளை பொன்னி புதுசு - 30; கர்நாடகா பொன்னி புதுசு - 36, பழையது 38; சோனா பொன்னி - 37; பிரியாணி அரிசிகளான எச்.எம்.டி., பொன்னி - 40; சீரக சம்பா- 70க்கு விற்கப்படுகின்றன.அரிசி ஆலை உரிமையாளர் கூறுகையில், "தஞ்சாவூரில் இருந்து, அரிசி ஆலைகளுக்கு போதிய அளவிற்கு நெல் வந்து கொண்டுள்ளது.இதனால், அரிசி விலை குறைந்துவிட்டது. இதன் விலை மேலும், குறைய வாய்ப்பு உள்ளது,' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|