பதிவு செய்த நாள்
12 நவ2012
01:26
புதுடில்லி: மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான, எரிபொருள் பற்றாக்குறையால், நாட்டின்மின்சார உற்பத்தி, 20 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என, மத்திய மின் அமைச்சகத்தின் இணை செயலர் கேசரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:அனல் மின் நிறுவனங்களுக்கு, தேவையான அளவு நிலக்கரி கிடைக்காததால், 12 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, எரிபொருள் பற்றாக்குறையால், எரிவாயு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியும், 8 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், 8 ஆயிரம் மெகாவாட் அளவிலான, எரிவாயு மின் உற்பத்தி திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர, நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட 12-13 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்களுக்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சில திட்டங்கள், அடுத்த ஆண்டு முதல், செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு கேசரி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|