பதிவு செய்த நாள்
13 நவ2012
02:11
புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பணவீக்கம், 9.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில், 9.73 சதவீதமாக சற்று குறைவாக இருந்தது. சர்க்கரை, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, சில்லரை பணவீக்கம் இரட்டை இலக்கு அளவை நோக்கி உயர்ந்து
வருகிறது. மதிப்பீட்டு மாதத்தில், ஆண்டுக்கணக்கின் அடிப்படையில், சர்க்கரை விலை, 19.61 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் விலை முறையே, 17.92 சதவீதம் மற்றும் 14.89 சதவீதம் உயர்ந்துள்ளது.மேலும், காய்கறிகள் விலை, 10.74 சதவீதமும், மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலை, 12.18 சதவீதமும் அதிகரித்துள்ளது.இதே போன்று, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றின் விலை, 10.47 சதவீதம் உயர்ந்துள்ளது.சென்ற அக்டோபர் மாதத்தில், நகர்புற பகுதிகளில், சில்லரை விலை பணவீக்கம், 9.46 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதத்தில், 9.72 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும், கிராமப்புற பகுதிகளில், நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும், பணவீக்கம், 9.79 சதவீதத்திலிருந்து, 9.98 சதவீதமாக அதிகரித்துள்ளது.நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் வெளியிட்ட அதன் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிததத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இருப்பினும், ரொக்க இருப்பு விகிதத்தை மட்டும், 0.25 சதவீதம் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி, டிசம்பர் மாத இறுதியில் அறிவிக்க உள்ள அதன் நிதி ஆய்வுக் கொள்கையிலும், வங்கிகளுக்கான, "ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பில்லை என, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|