பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் குறைகிறதுபெட்ரோல் விலை நள்ளிரவு முதல் குறைகிறது ... தமிழகத்தில் முட்டை விலை 315 காசாக நிர்ணயம் தமிழகத்தில் முட்டை விலை 315 காசாக நிர்ணயம் ...
தங்கத்திற்கான தேவை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2012
01:52

மும்பை : சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 223.10 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டை (204.80 டன்) விட, 9 சதவீதம் அதிகம் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்தியாவில், பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் போன்ற காரணங்களால், இரண்டாவது ஆறு மாத காலத்தில், இதன் தேவை படிப்படியாக
அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விற்பனையும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.சென்ற செப்டம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவை, 1,084 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலாண்டை (1,223 டன்) விட, 11 சதவீதம் குறைவாகும்.

இதே காலாண்டுகளில், சீனாவில் தங்கத்திற்கான தேவை, 8 சதவீதம் குறைந்து, 191 டன்னிலிருந்து, 177 டன்னாக குறைந்துள்ளது.சீனாவின் பொருளாதார சுணக்க நிலையால், அந்நாட்டில் நடப்பாண்டில், தங்க ஆபரணத்திற்கான தேவை, 6 சதவீதம் என்ற அளவில், குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மதிப்பு உயர்வு : இறக்குமதி செய்யப்படும், தங்கம், வெள்ளி ஆகிய வற்றின் மதிப்பை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது.தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதியில், மதிப்பை குறைத்துக் காட்டி, வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க, இரு வாரங்களுக்கு ஒரு முறை, அவற்றின் இறக்குமதி மதிப்பை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.இதன்படி, தற்போது இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 561 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 1,058 டாலர் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விலை மதிப்பின் அடிப்படையில் தான், இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது வரி விதிக்கப்படும்.சென்ற அக்டோபர் மாதத்தில், இறக்குமதி செய்யப்பட்ட, 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 556 டாலர் எனவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 1,039 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தங்கம், வெள்ளியின் இறக்குமதி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சில பொருட்களின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் மதிப்பு, 887 டாலராகவும், ஒரு டன் பித்தளை கழிவின் விலை, 4,029 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது.இது, சென்ற மாதம், முறையே 889 டாலர் மற்றும் 4,096 டாலராக இருந்தது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)