பதிவு செய்த நாள்
16 நவ2012
01:55
மும்பை:
நடப்பு, 2012ம் ஆண்டின், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த, மூன்றாவது
காலாண்டில், சர்வதேச அளவில், அலைபேசி சாதனங்களின் விற்பனை, 42.80 கோடியாக
சரிவடைந்துள்ளன.
இது, சென்ற, 2011ம் ஆண்டில், இதே காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை
விட, 3.1 சதவீதம் குறைவாகும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம்
தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், விற்பனையான ஒட்டுமொத்த அலைபேசி
சாதனங்களில், பன்முக பயன்பாடு கொண்ட, "ஸ்மார்ட்போன்'களின் பங்களிப்பு, 39.6
சதவீதம் (16.92 கோடி) என்ற அளவில் உள்ளது."ஸ்மார்ட்போன்' விற்பனையில்,
"ஆப்பிள்' மற்றும் "சாம்சங்' நிறுவனங்களே முன்னணியில் உள்ளன.
அடுத்த இடங்களில், பிளாக் பெர்ரி என்ற பெயரில், அலைபேசி சாதனங்களை விற்பனை
செய்து வரும், ரிசர்ச் இன் மோஷன் மற்றும் எச்.டி.சி., நிறுவனங்கள்
உள்ளன.சென்ற, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த, இரண்டாவது காலாண்டில், "ஸ்மார்ட்போன்' விற்பனையில், மூன்றாவது இடத்தில் இருந்த, நோக்கியா நிறுவனம், மூன்றாவது காலாண்டில், ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், "ஸ்மார்ட்போன்'களுக்கான தேவை அதிகரித்து வரும் அதே வேளையில், சாதாரண அலைபேசி சாதனங்கள் விற்பனையில் சுணக்கம் காணப்படுகிறது. நடப்பு
நான்காவது காலாண்டில், இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என,
மதிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|