பதிவு செய்த நாள்
16 நவ2012
01:57
-
பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -ஏற்றுமதியை ஊக்குவிக்க, சிறப்பு
பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட
சலுகைகள் வழங்க வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.இந்தியாவின் ஏற்றுமதி, தொடர்ந்து ஆறு மாதங்களாக சரிவடைந்து
வருகிறது. அதே சமயம், இதே காலத்தில், இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால்,
வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
நடப்பு
2012-13ம் நிதியாண்டின், சென்ற அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில்,
ஏற்றுமதி, 6.18 சதவீதம் சரிவடைந்து, 16,700 கோடி டாலராக குறைந்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில்,17,800 கோடி டாலராக
இருந்தது.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், சென்ற அக்டோபர் மாதம், நாட்டின்
ஏற்றுமதி, 1.6 சதவீதம் குறைந்து, 2,325 கோடி டாலராக
சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், 36 ஆயிரம் கோடி டாலர் (19.80 லட்சம்
கோடி ரூபாய்) மதிப்பிற்கு, ஏற்றுமதி மேற்கொள்ள, மத்திய அரசு இலக்கு
நிர்ணயித்துள்ளது. ஆனால், ஏற்றுமதி குறைந்து வருவதால் இந்த இலக்கை எட்டுவது
கடினம் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.ஏற்றுமதியை அதிகரிக்க, சிறிய
மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க தனி நிதியம் ஏற்படுத்த
வேண்டும், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்பட்டு வரும்
நிறுவனங்களுக்கு வரி விலக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், ஏற்றுமதி நிறுவனங்கள் பெறும் வங்கிக்
கடனுக்கான வட்டியில் தள்ளுபடி, செலுத்திய தீர்வையை திரும்ப பெறும்
திட்டத்தில் கூடுதல் சலுகைக்கு அனுமதி போன்றவற்றை நடைமுறை படுத்த வேண்டும்
எனவும், ஏற்றுமதியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏற்றுமதி கடனுக்கான
வட்டியை, 9 சதவீதமாக குறைக்க வேண்டும், குறைந்தபட்ச மாற்று வரி மற்றும்
டிவிடெண்டு வினியோக வரி போன்றவற்றையும் நீக்க வேண்டும் எனவும், வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய வர்த்தக துறை செயலர் எஸ்.ஆர்.ராவ்
கூறும்போது,"ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, துறை வாரியான சலுகைகள்
வழங்குவது குறித்து அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் ஆய்வு செய்து
வருகிறது' என்று தெரிவித்தார்.நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், சிறப்பு
பொருளாதார மண்டலங்களில் உள்ள, நிறுவனங்களின் பங்களிப்பு, 30 சதவீதமாக
உள்ளது. இம்மண்டலங்களில், 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|