பதிவு செய்த நாள்
16 நவ2012
02:01
மும்பை:
நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக் கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன்
காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள் சாதகமற்று காணப்பட்டதால்,
இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.மேலும்,
ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாக
இருந்தது.
இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.நேற்று
நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், உலோகம், நுகர்
பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு
கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச்
சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச்
சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 147.50 புள்ளிகள்
வீழ்ச்சி கண்டு, 18,471.37 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக,
18,593.54 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,408.69 புள்ளிகள்
வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா
ஸ்டீல், ஐ.டி.சி., ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை
குறைந்தும், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின்
விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,
"நிப்டி', 35.95 புள்ளிகள் சரிவடைந்து, 5,631 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,651.65 புள்ளிகள் வரையிலும்,
குறைந்தபட்சமாக, 5,603.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|