"சென்செக்ஸ்' 148 புள்ளிகள் வீழ்ச்சி"சென்செக்ஸ்' 148 புள்ளிகள் வீழ்ச்சி ...  தாவர எண்ணெய் இறக்குமதி ஒரு கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி ஒரு கோடி டன் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2012
02:05

புதுடில்லி: நாட்டின், பொருளாதார வளர்ச்சிக்கு, வங்கிகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். தொழில் துறை வளர்ச்சி காணும் நிலையில் பொருளாதாரமும் தானாகவே வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.பொதுத் துறை வங்கிகளின், செயல்பாடுகள் குறித்து, வங்கி தலைவர்களுக்கான கூட்டம், சிதம்பரம் தலைமையில், டில்லியில் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு, அவர், செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள் வருமாறு:நாட்டின், அடிப்படை கட்டமைப்பு, உருக்கு, ஜவுளி, கட்டுமானம், உணவு பதப்படுத்துதல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட ஒரு சில துறைகளில், மந்த நிலை காணப்படுகிறது. அதேசமயம், வீட்டு வசதி, மோட்டார் வாகனம் ஆகிய துறைகள் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 0.98 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு, குறிப்பிட்ட சில தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள, மந்த நிலை தான் காரணமாகும். இத்துறைகளுக்கு, வங்கிகள் போதிய அளவிற்கு, கடனுதவி அளிக்க வேண்டும்.இதைத் தொடர்ந்து, தானாகவே, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது.
பொதுத் துறை வங்கிகள், தாராளமாக கடனுதவி அளிக்க வேண்டுமானால், அவற்றிற்கு, மூலதனம் தேவைப்படுகிறது. "பேசல் ஐஐஐ' விதிமுறை, வரும் 2013ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் படி, வங்கிகள், அவை வழங்கும் கடனுக்கு ஏற்ப, மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்து கொள்ள வேண்டும்.இதற்காக, மத்திய அரசு, 15 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் அளிக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளுக்கு, அடுத்த ஒரு சில வாரங்களில், மூலதனம் அளிப்பது குறித்து முடிவு

செய்யப்பட உள்ளது.@வளாண் துறைநாட்டின், முதுகெலும்பாகத் திகழும் வேளாண் துறைக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதற்கு, வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும். நடப்பு நிதியாண்டிற்கு, வேளாண் துறைக்கு வழங்க வேண்டிய கடன் இலக்கை, வங்கிகள், எட்டிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.விவசாயிகளுக்கான, "கிசான் கிரெடிட் கார்டு'கள், வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் "ஏ.டி.எம்., கார்டு'களாக மாற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கித் தலைவர்களும், இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நடப்பு நிதியாண்டில், பொது துறை வங்கிகள், 3,955 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகள் அனைத்திலுமாக, 63,200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளன.புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான நெறிமுறைகளை, விரைந்து உருவாக்கித் தரும்படியும், அதற்கான விண்ணப்பங்களை பெறும் வகையிலும், ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நெறிமுறைகள்ரிசர்வ் வங்கியின், புதிய நெறிமுறைகளுக்கு ஏற்ப, வங்கிகளுக்கான சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ளப்படும். இது, பார்லிமென்டில், குளிர்கால கூட்டத்தொடர் அல்லது பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்.வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான, வரைவு நெறிமுறைகளின் படி, புதிதாக தொடங்கப்படும் ஒரு வங்கி, குறைந்தபட்சம், 500 கோடி ரூபாய் மூலதனம் கொண்டு வரவேண்டும். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, அன்னிய பங்கு மூலதனம், 49 சதவீத அளவிற்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)