"சென்செக்ஸ்' 148 புள்ளிகள் வீழ்ச்சி"சென்செக்ஸ்' 148 புள்ளிகள் வீழ்ச்சி ... பெட்ரோல் விலை ரூ.1.20 குறைந்தது : நேற்று நள்ளிரவு முதல் அமல்! பெட்ரோல் விலை ரூ.1.20 குறைந்தது : நேற்று நள்ளிரவு முதல் அமல்! ...
தாவர எண்ணெய் இறக்குமதி ஒரு கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2012
02:06

புதுடில்லி: அண்மையில் முடிவடைந்த, 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவம்பர் - அக்டோபர்), நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 17 சதவீதம் அதிகரித்து, 1 கோடி டன்னை தாண்டியுள்ளது.

இது, கடந்த பருவத்தில், 87 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தனி நபர் எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், உள்நாட்டில், தாவர எண்ணெய்க்கான தேவை, கூடுதலாக, 8 லட்சம் டன் வரை உயர்ந்துள்ளது.மேலும், தாவர எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டதால், உள்நாட்டில், இதன் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.மலேசியாவில் கையிருப்பு அதிகரிப்பு மற்றும் இந்தோனேஷியா அரசு, கச்சா பாமாயில் ஏற்றுமதிக்கான வரியை குறைத்தது போன்றவற்றால், இதன் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.ஒட்டு மொத்த, 1.02 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெய்யின் பங்களிப்பு, 1 கோடி டன்னாகவும், சமையல் சாராத எண்ணெய்யின் பங்களிப்பு, 2 லட்சம் டன்னாகவும் உள்ளது.நாட்டின் பாமாயில் இறக்குமதி, 65.40 லட்சம் டன்னிலிருந்து, 76.60 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், சோயா எண்ணெய் இறக்குமதி, 10.70 லட்சம் டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 11.30 லட்சம் டன்னாகவும், கடுகு எண்ணெய் இறக்குமதி,91 ஆயிரம் டன்னாகவும் உள்ளது.ஒட்டு மொத்த எண்ணெய் பயன்பாடு, 12.50 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, நடப்பு பருவத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.இந்தியா, பாமாயிலை, இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளிலிருந்தும், சோயா எண்ணெய்யை, பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து கொள்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)