பதிவு செய்த நாள்
16 நவ2012
02:06
புதுடில்லி:
அண்மையில் முடிவடைந்த, 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவம்பர் -
அக்டோபர்), நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 17 சதவீதம் அதிகரித்து, 1
கோடி டன்னை தாண்டியுள்ளது.
இது, கடந்த பருவத்தில், 87 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய்
உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.மக்கள் தொகை
பெருக்கம் மற்றும் தனி நபர் எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால்,
உள்நாட்டில், தாவர எண்ணெய்க்கான தேவை, கூடுதலாக, 8 லட்சம் டன் வரை
உயர்ந்துள்ளது.மேலும், தாவர எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டதால்,
உள்நாட்டில், இதன் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும்
தெரிவித்துள்ளது.மலேசியாவில் கையிருப்பு அதிகரிப்பு மற்றும் இந்தோனேஷியா
அரசு, கச்சா பாமாயில் ஏற்றுமதிக்கான வரியை குறைத்தது போன்றவற்றால், இதன்
இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.ஒட்டு மொத்த, 1.02 கோடி
டன் தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெய்யின் பங்களிப்பு, 1 கோடி
டன்னாகவும், சமையல் சாராத எண்ணெய்யின் பங்களிப்பு, 2 லட்சம் டன்னாகவும்
உள்ளது.நாட்டின் பாமாயில் இறக்குமதி, 65.40 லட்சம் டன்னிலிருந்து, 76.60
லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், சோயா எண்ணெய் இறக்குமதி, 10.70 லட்சம்
டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 11.30 லட்சம் டன்னாகவும்,
கடுகு எண்ணெய் இறக்குமதி,91 ஆயிரம் டன்னாகவும் உள்ளது.ஒட்டு மொத்த எண்ணெய்
பயன்பாடு, 12.50 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, நடப்பு
பருவத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.இந்தியா, பாமாயிலை,
இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளிலிருந்தும், சோயா எண்ணெய்யை, பிரேசில்
மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து கொள்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|