பதிவு செய்த நாள்
16 நவ2012
10:38
புதுடில்லி: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 95 காசு குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆனால், வரி விதிப்பு மாற்றம் காரணமாக, சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.20 ரூபாய் குறைந்துள்ளது.பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டு முறையை, 2010 ஜூனில், மத்திய அரசு கைவிட்டது. இதையடுத்து, சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை, அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.அதன்படி, அக்டோபர் மாதம், 9ம் தேதி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 56 காசு குறைக்கப்பட்டது. இதன்பின், பெட்ரோல், "பங்க்' டீலர்களுக்கான கமிஷன் உயர்த்தப்பட்டதை அடுத்து, லிட்டருக்கு, 29 காசு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு, 95 காசு குறைக்கப்பட்டது. இந்த, 95 காசு விலை குறைப்பு, தலைநகர் டில்லிக்கு மட்டுமே பொருந்தும்.அதேநேரத்தில், மும்பை மற்றும் சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.20 ரூபாய் குறையும்; கோல்கட்டாவில், இந்த விலை குறைப்பு, 1.19 ரூபாயாக இருக்கும். ஒவ்வொரு நகரங்களிலும் அமலில் உள்ள, விற்பனை வரி அல்லது "வாட்' வரியை பொறுத்து, இந்த விலை வேறுபாடுகள் அமலுக்கு வரும்.சென்னையில், இதுவரை பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 71.77 ரூபாயாக இருந்தது; இனி, 70.57 ரூபாய்க்கு விற்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|