பதிவு செய்த நாள்
16 நவ2012
11:13
புதுடில்லி: சமையல் காஸ் இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், காஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கும் நிறுவனங்களில், தங்களைப் பற்றிய விவரங்களை (கே.ஒய்.சி.,) சமர்பிப்பதற்கான கால அவகாசம், இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.வரும் ஏப்., முதல், ஒரு குடும்பத்திற்கு, வருடம் ஒன்றுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, ஒருவரே, பல காஸ் இணைப்புகளை வைத்துள்ளதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
அதனால், சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்போர், தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, இம்மாதம் 15ம் தேதிக்குள், அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த காலக் கெடுவை, இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|