பதிவு செய்த நாள்
16 நவ2012
12:57
ஐதராபாத்: நாட்டில், அதிக எண்ணிக்கையில், பாஸ்போர்ட் வழங்குவதில், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்தாண்டில், 80 லட்சம் புதிய பாஸ்போர்டுகள் வழங்கப்பட உள்ளன.தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, முகேஷ் கே பர்தேசி நேற்று கூறியதாவது:நாடு முழுவதும், முக்கிய நகரங்களில், 77 பாஸ்போர்ட் சேவா அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம், கடந்த ஆண்டில், 73.65 லட்சம் பாஸ்போர்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில், 80 லட்சம் பாஸ்போர்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எளிதாக பாஸ்போர்ட் வழங்க வகை செய்யும், 13, இலகு பாஸ்போர்ட் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.அதிகப்படியான பாஸ்போர்ட் வழங்குவதில், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆந்திராவில், தினமும், 3,500 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|