பதிவு செய்த நாள்
17 நவ2012
00:28
புதுடில்லி:
பொதுத் துறையை சேர்ந்த, "நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்'
(என்.எம்.டீ.சி.,) நிறுவனத்தின் பங்கு வெளியீடு, அடுத்த மாதம் மத்தியில்
மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.மத்திய அரசு, நடப்பு
நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு
மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30
ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.இதில், முதற்கட்டமாக,
நடப்பு மாதத்தில், என்.எம்.டீ.சி., நிறுவனத்தின், 10 சதவீத பங்கு விற்பனை
மூலம், 7,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது.
பங்கு வர்த்தகம்
நன்கு இல்லாததால், இந்நிறுவனத்தின் பங்கு விற்பனை, அடுத்த மாதம், மத்தியில்
மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.சென்ற, 2011 - 12ம்
நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை
மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுஇருந்தது. பங்கு வர்த்தகம்
நன்கு இல்லாததால், 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்டி கொண்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|