என்.எம்.டீ.சி., நிறுவனம் டிசம்பரில் பங்கு வெளியீடுஎன்.எம்.டீ.சி., நிறுவனம் டிசம்பரில் பங்கு வெளியீடு ... அதிக கொப்பரை வரத்தால் தேங்காய் எண்ணெய் விலை சரியும் அதிக கொப்பரை வரத்தால் தேங்காய் எண்ணெய் விலை சரியும் ...
உணவு சாரா துறைக்கான வங்கிகடன் 15.87 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2012
00:29

மும்பை: நடப்பு மாதம் 2ம் தேதி வரையிலுமாக, உணவு சாரா துறைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 47.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலம் வரையிலுமாக வழங்கப்பட்ட கடனை விட, 15.87 சதவீதம் அதிகம். இருப்பினும், இது, ரிசர்வ் வங்கி, நிர்ணயித்துள்ள, 16 சதவீத இலக்கை விட குறைவாகும்.பொதுவாக, ஒரு நிதியாண்டின் இரண்டாவது ஆறு மாத காலத்தில் தான் வங்கிகள் வழங்கும் கடன்கள் அதிகரிக்கும்.ஏனெனில், பண்டிகை மற்றும் திருமண காலங்கள் அப்போதுதான் அதிகமாக இடம்பெறுகின்றன.குறிப்பாக, அக்டோபர் முதல் மார்ச் வரையிலுமாக, நுகர்வோர் செலவினம் அதிகரிப்பதுடன், நிறுவனங்களும் அதிகளவில் திட்டங்களை மேற்கொள்ளும். இந்நிலையில், நடப்பு மாதம் 2ம் தேதி வரையிலான இரு வாரங்களில், வங்கிகள் வழங்கிய கடன், 35 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
பல வங்கிகள், கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இதனால், சில்லரை கடன் வாங்குவது உயர்ந்துள்ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. குறிப்பாக, எஸ்.பீ.ஐ., வாகன மற்றும் வீட்டு கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை குறைத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், இனி வரும் மாதங்களில், வங்கிகளிலிருந்து கடன் பெறுவது அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நவம்பர் 2ம் தேதி வரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி வரையிலான, இருவார காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 47,211 கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)