பதிவு செய்த நாள்
17 நவ2012
00:34
கொச்சி:
சர்வதேச சந்தையில், இந்திய மிளகின் விலை அதிகமாக உள்ளதால், மற்ற நாடுகளோடு
போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், சென்ற ஆண்டு, சர்வதேச மிளகு
ஏற்றுமதியில், நான்காவது இடத்தில் இருந்த, இந்தியா, நடப்பாண்டில், ஐந்தாவது
இடத்திற்கு தள்ளப்படும் என, சர்வதேச மிளகு உற்பத்தியாளர் கூட்டமைப்பு
(ஐ.பி.சி.,) மதிப்பிட்டுள்ளது.சர்வதேச அளவில், மிளகு உற்பத்தி மற்றும்
பயன்பாட்டில், இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. நடப்பு
2012ம் ஆண்டில், சர்வதேச மிளகு ஏற்றுமதியில், வியட்நாம் நாட்டின்
பங்களிப்பு, 1.08 லட்சம் டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, இந்தோனேஷியா (53 ஆயிரம் டன்), பிரேசில் (27,500 டன்), மலேசியா
(20 ஆயிரம் டன்) என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்தியாவின் பங்களிப்பு, 17,500 டன் என்ற அளவில் தான் இருக்கும்
என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச
மிளகு ஏற்றுமதியில், இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளை விஞ்சி, இந்தியா
முன்னணியில் இருந்தது.
சர்வதேச அளவில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய மிளகின் விலை,
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அதிகமாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய
சந்தைகளான, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கான மிளகு
ஏற்றுமதியும் குறைந்துள்ளது.நடப்பாண்டில், அக்டோபர் வரையிலுமாக,
இந்தியாவின் மிளகு ஏற்றுமதி, 16 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற
ஆண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (20 ஆயிரம் டன்) விட,
16 சதவீதம் குறைவாகும்.அதேசமயம், வியட்நாம் நாட்டின், மிளகு ஏற்றுமதி, 1.02
லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|