பதிவு செய்த நாள்
18 நவ2012
06:20
மும்பை: சென்ற 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 79 கோடி டாலர் (4,345 கோடி ரூபாய்) குறைந்து, 29,355 கோடி டாலராக (16.14 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய, 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,434 கோடி டாலராக
(16.18 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே வாரங்களில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 25,870 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் எவ்வித மாற்றமும் இன்றி, 2,818 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.எஸ்.டீ.ஆர். மதிப்பு, 440 கோடி டாலர் என்ற அளவிலும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 225 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|