பதிவு செய்த நாள்
18 நவ2012
07:04
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 95 கோடி கிலோவாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், இதன் உற்பத்தி, 98 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், தேயிலை உற்பத்தி, 69.03 கோடி கிலோவாக அதிகரித்துஉள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 68.87 கோடி கிலோ என்ற அளவிலேயே குறைந்து காணப்பட்டது.நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டில் தேயிலை அதிகம் விளையும் பகுதிகளில், அளவிற்கு அதிகமாக மழைப் பொழிவு இருந்தது.இதனால், தேயிலைத் தோட்டங்கள் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வரும் மாதங்களில் தேயிலை உற்பத்தி சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|