பதிவு செய்த நாள்
19 நவ2012
01:04
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கியும், ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளது என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, ஆமதாபாத், டில்லி என்.சி.ஆர்., மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி கடன் நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வின் மூலம், இது, தெரிய வந்துள்ளது.குறிப்பாக, தலைநகர் பிராந்தியங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், வீடுகள் விற்பனை சரிவடைந்துள்ளது. இதற்கு, நிலங்களின் விலை பன்மடங்கு அதிகரிப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு போன்றவையே முக்கிய காரணம்.பண்டிகை காலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அவற்றின் விற்பனையை அதிகரிக்க, பல்வேறு சலுகைகளை வழங்கும்.பத்திரப் பதிவு இலவசம், தங்க நாணயம் பரிசு என்ற, கவர்ச்சிகரமான சலுகைகளால், பண்டிகை காலங்களில், வீடுகள் மற்றும் மனைகளுக்கான தேவை, 100 சதவீதம் வளர்ச்சி காணும்.
ஆனால், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையின் போது, மாதாந்திர சராசரி விற்பனையை விட, 20 சதவீத அளவிற்கே விற்பனை அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில், வீடு மற்றும் மனைகளுக்கான தேவை, 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும் என, இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|