பதிவு செய்த நாள்
19 நவ2012
01:05
புதுடில்லி:
இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எப்.சி.,), வரி விலக்கு
சலுகை கொண்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, 10 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட
திட்டமிட்டுள்ளது. இக்கடன் பத்திர வெளியீடு, அடுத்த ஆண்டு, ஜனவரி
மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சகம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இத்துறை
சார்ந்த பொது துறை நிறுவனங்கள், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள
அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பு
வசதிகளுக்காக, ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், கடந்த ஆண்டு, வரி விலக்கு கொண்ட
கடன் பத்திரங்களை வெளியிட்டு, 7 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.
இந்நிலையில், இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்குள், 10 ஆயிரம் கோடி
ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள்
இக்கடன் பத்திர வெளியீடு இருக்கும் என,தெரிகிறது. இதற்கான வட்டி விகிதம்,
7.5 - 8 சதவீதம் ஆக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது
"கடந்த
நிதியாண்டில், வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம், 8.73
சதவீதமாக இருந்தது. கடன் பத்திரங்கள் வேண்டி, மூன்று மடங்கிற்கும் அதிகமான
விண்ணப்பங்கள் குவிந்தன. இதே வரவேற்பு, நடப்பாண்டிலும் இருக்கும்' என,
எதிர்பார்க்கப்படுவதாக, ஐ.ஆர்.எப்.சி., நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், மின்சாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு
துறை சார்ந்த பொது துறை நிறுவனங்கள், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக்
கொள்ள, மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|