ஊதுபத்தி தொழிலில் பெருகும் வர்த்தக வாய்ப்புஊதுபத்தி தொழிலில் பெருகும் வர்த்தக வாய்ப்பு ... உணவு தானிய சாகுபடி பரப்பளவு196 லட்சம் ஹெக்டேராக குறைவு உணவு தானிய சாகுபடி பரப்பளவு196 லட்சம் ஹெக்டேராக குறைவு ...
ஐ.ஆர்.எப்.சி., ரூ.10 ஆயிரம் கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2012
01:05

புதுடில்லி: இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எப்.சி.,), வரி விலக்கு சலுகை கொண்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, 10 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இக்கடன் பத்திர வெளியீடு, அடுத்த ஆண்டு, ஜனவரி மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சகம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இத்துறை சார்ந்த பொது துறை நிறுவனங்கள், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், கடந்த ஆண்டு, வரி விலக்கு கொண்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, 7 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. இந்நிலையில், இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்குள், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் இக்கடன் பத்திர வெளியீடு இருக்கும் என,தெரிகிறது. இதற்கான வட்டி விகிதம், 7.5 - 8 சதவீதம் ஆக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது
"கடந்த நிதியாண்டில், வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம், 8.73 சதவீதமாக இருந்தது. கடன் பத்திரங்கள் வேண்டி, மூன்று மடங்கிற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. இதே வரவேற்பு, நடப்பாண்டிலும் இருக்கும்' என, எதிர்பார்க்கப்படுவதாக, ஐ.ஆர்.எப்.சி., நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், மின்சாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த பொது துறை நிறுவனங்கள், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள, மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)