பதிவு செய்த நாள்
19 நவ2012
01:06
புதுடில்லி:
நடப்பு ரபி பருவத்தில் (அக்டோபர் -மார்ச்), கடந்த 16ம் தேதி வரையிலுமாக,
உணவு தானியங்கள் சாகுபடி பரப்பளவு, 195.86 லட்சம் ஹெக்டேராக
குறைந்துள்ளது.இது, முந்தைய பருவத்தில், 223.06 லட்சம் ஹெக்டேராக
அதிகரித்து காணப்பட்டது. கணக்கீட்டு காலத்தில், நாட்டின், கோதுமை சாகுபடி
பரப்பளவு, 49.60 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இது, முந்தைய பருவத்தில்,
இதே காலத்தை (60.26 லட்சம் ஹெக்டேர்) விட, 18 சதவீதம் குறைவாகும்.நடப்பு
பருவத்தில், பருவ மழை குறைந்ததால், அரியானா, உத்தர பிரதேசம், உத்தர்காண்ட்,
குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், கோதுமை
பரியிடும் பரப்பளவு கணிசமாக குறைந்துள்ளது.
சென்ற 2011-12ம் வேளாண்
பருவத்தில், நாட்டின், கோதுமை உற்பத்தி, 9.39 கோடி டன் என்ற அளவில் மிகவும்
அதிகரித்து காணப்பட்டது.நடப்பு ரபி பருவத்தில், சென்ற 16ம் தேதி
வரையிலுமாக, கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்கள் சாகுபடி பரப்பளவு,
35.44 லட்சம் ஹெக்டேராக சற்று அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில்,
பருப்பு வகைகளின் பயிர் பரப்பளவு, 76.12 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 63.51
லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. அதேசமயம், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி
பரப்பளவு, 46.86 லட்சத்திலிருந்து 50.81 லட்சம் ஹெக்@டராக,
அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|