பதிவு செய்த நாள்
19 நவ2012
01:10
புதுடில்லி:
ஏர்-இந்தியா நிறுவனத்தின் ஐந்து, "போயிங்' விமானங்களை வாங்க யாரும்
முன்வராததால், அவற்றை விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டது.பெரும் நிதி
நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர்-இந்தியா நிறுவனம், அதன் இழப்பை குறைத்துக்
கொள்ளும் பொருட்டு, சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிறுவனம், எரிபொருள் செலவு அதிகரிப்பால், ஏற்படும் இழப்பை குறைக்கும்
பொருட்டு, அதன் இரண்டு "போயிங் 777-200 எல்.ஆர்., மற்றும் மூன்று "போயிங்
777-300 இ.ஆர்.,'விமானங்களை விற்பனை செய்வதாக அறிவித்தது.ஆனால்,
இவ்விமானங்களை வாங்க ஆளில்லாததால், இவற்றை தயாரித்த "போயிங்' நிறுவனத்திடமே
விற்றுத் தரும்படி கோரியது. ஆனால், போயிங் நிறுவனமோ, மவுனமாக கைவிரித்து
விட்டது.இதனால், விமான விற்பனை திட்டத்தை, ஏர்-இந்தியா கைவிட்டுள்ளது. அதே
சமயம், இந்த விமானங்களின் உயர் வகுப்பு இருக்கைகளை, சாதாரண வகுப்பாக
மாற்றி, வளைகுடா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவிற்கு விமான சேவை மேற்கொள்ள,
ஏர்-இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதே "போயிங் 777' விமானங்களை இயக்கும் பிற
நிறுவனங்கள், லாபமீட்டி வருகையில், ஏர்-இந்தியா மட்டும் இழப்பை
சந்திப்பதற்கு, விமானங்களில் உள்ள உயர்வகுப்பு பிரிவுதான் காரணம் என்று
கூறப்படுகிறது.சர்வதேச நிறுவனங்களின், "போயிங் 777' விமானங்களை விட,
ஏர்-இந்தியாவின் இதே வகை விமானங்களில், உயர் வகுப்பு இருக்கைகள் குறைவாக
உள்ளன.இருந்தபோதிலும், இருக்கை அடிப்படையிலான பயணிகளின் எண்ணிக்கை,
சராசரியாக, முதல் வகுப்பில், 12 சதவீதமும், வர்த்தக வகுப்பில், 27 சதவீத
அளவிற்கும் உள்ளது. இது, சர்வதேச விமான நிறுவனங்களின் "போயிங்'
விமானங்களில், 50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது. இதனால், அவை
லாபகரமாக இயங்கி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|