வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை சரிவு வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை சரிவு ... இஞ்சி விலை கிடு கிடு... இஞ்சி விலை கிடு கிடு... ...
புதிய வாகனங்களை மெருகேற்றும் சந்தை சூடுபிடிக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2012
01:14

மும்பை: புதிய வாகனங்களின் விற்பனைக்கு பிறகு, அவற்றை மேலும் மெருகேற்றி, அழகுபடுத்த பலர் விரும்புவர். இவ்வகையில், காரில் பொருத்தப்படும் பிரத்யேக உபகரணங்கள், இருக்கைகள், ஸ்டிக்கர்கள், உள் மற்றும் வெளி அலங்கார பொருட்கள் ஆகியவற்றுக்கான சந்தை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
வாகன விற்பனைக்கு பிந்தைய இச்சந்தையில், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.இவ்வகையில், வாகனங்களுக்கு புதிய வண்ணம் பூசுதல், ஸ்டிக்கர் ஒட்டுதல், வாகனங்களின் திறனை கூட்டுவது போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், வாகனங்களில் கூடுதல் உபகரணங்களை பொருத்துதல், வாகன வடிவினை மாற்றுதல் என, பல்வேறு வகையில், விற்பனைக்கு பிந்தைய வாகன சந்தையின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.வரும் 2015ம் நிதியாண்டில், இச்சந்தையின் மதிப்பு, 37 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனமான மெக்கென்ஸி மதிப்பிட்டுள்ளது.

தற்போது, வாகன விற்பனைக்கு பிந்தைய சந்தையின் மதிப்பு, 28 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், இருசக்கர வாகனங்களின் பங்களிப்பு, 49 சதவீதமாக உள்ளது. இதன் மதிப்பு, 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் மிகவும் அதிகமாக உள்ளது.அதே சமயம், கார் பிரிவு, 26 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. கார்களை மெருகேற்றும் சந்தையில், ஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகின்றது. அதுபோன்று, இச்சந்தையில் வர்த்தக வாகனங்கள், பேருந்து, டிரெயிலர் உள்ளிட்டவற்றின் பங்களிப்பு, 25 சதவீதமாக உள்ளது.இந்தியாவில், வாகன விற்பனைக்கு பிந்தைய சந்தை, ஆண்டுதோறும், 11 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், வரும் 2015ம் நிதியாண்டில், இச்சந்தையின் மதிப்பு, 37 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வாகனங்கள்புதிய வாகனங்களை மெருகேற்றுவது போன்று, பழைய வாகனங்களை வாங்கி அதை புதுப்பொலிவுடன், புத்தம் புது வாகனமாக மாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குறைவான தேய்மானத்துடன், வெளியாகி ஓரிரு ஆண்டுகளான கார்,மோட்டார்சைக்கிள்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை, குறைந்த விலையில் வாங்க, மக்கள் விரும்புகின்றனர்.இதனால், இவ்வகை வாகன விற்பனையில், அமைப்பு சாரா நிறுவனங்களுடன், தற்போது அமைப்பு சார்ந்த நிறுவனங்களும் ஈடுபடத் துவங்கியுள்ளன. இதன் காரணமாக, பழைய வாகன சந்தையும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

தற்போது, முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு, 150 சி.சி., 200 சி.சி. என, பல்வேறு வகையான வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இதற்கு கடன் வசதிகளையும் ஏற்படுத்தி தருகின்றன.இதனால், பலர் தங்களிடம் உள்ள, குறைந்த இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து விட்டு, புதிய வாகனங்களை வாங்கி வருகின்றனர்.இவ்வாறு விற்பனை செய்யப்படும் பழைய வாகனங்கள், பழுது பார்க்கப்பட்டு மறு விற்பனை செய்யப்படுகின்றன.

மிகவும் மோசமான நிலையில் உள்ள வாகனங்களில், உதிரிபாகங்கள் பிரிக்கப்பட்டு, தனித் தனியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.விற்பனை ஒரு சிலர், பழைய வாகனங்களுக்கு, புது வடிவம் கொடுத்து, மெருகேற்றி, அதை மறு விற்பனை செய்கின்றனர்.இவ்வகை வாகனங்களுக்கு, இளைஞர்களிடையே வரவேற்பு காணப்படுகிறது. நகரங்களை காட்டிலும், கிராமப் புறங்களில் இவற்றின் விற்பனை அதிகம் உள்ளது.புதிய கார்களை பொறுத்தவரை, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் நியமிக்கும் விற்பனை முகவர்களிடம்தான், கார்களை வாங்க முடியும்.ஆனால், பழைய வாகன சந்தையில், இந்த கட்டுப்பாடு இல்லை. வாகனங்களை, எந்த பகுதியிலும் விற்பனை செய்யும் வசதி உள்ளது. இதனால், இத்துறை வளர்ச்சி பல மடங்கு உயர்ந்து வருகிறது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)