புதிய வாகனங்களை மெருகேற்றும் சந்தை சூடுபிடிக்கிறதுபுதிய வாகனங்களை மெருகேற்றும் சந்தை சூடுபிடிக்கிறது ... வெங்காயம் விலை "விர்...' வெங்காயம் விலை "விர்...' ...
இஞ்சி விலை கிடு கிடு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2012
01:15

ஈரோடு: பருவமழையால் இஞ்சி உற்பத்தி கடும் பாதிப்படைந்து, வரத்து கணிசமாக குறைந்து விட்டது. தேவை அதிகரித்துள்ள நிலையில், விலையும் மூட்டைக்கு, 800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.உலகளவில் இஞ்சி, 55 சதவீதம் உணவு பொருளாகவும், 45 சதவீதம் மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கேரளா மற்றும் நீலகிரி மலை குன்றுகளில் அதிக பரப்பில் இஞ்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு பயன்பாட்டுக்கு இஞ்சி அனுப்பி வைக்கப்படுகிறது.பலர் இஞ்சி மூலம் கறிமசாலா, சுக்கு, பவுடர் தயாரித்து பாக்கெட்டில் விற்பனை செய்கின்றனர். மழைக்காலங்களில் இஞ்சி விலை அதிகரிப்பதும், கோடையில் குறைவதும் வாடிக்கை. கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் நீலகிரி மலை பகுதியில் கோடை மழை காரணமாக, இஞ்சி உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.பண்டிகை, முகூர்த்த சீசன் என, இஞ்சிக்கான தேவை அதிகரித்துஉள்ள நிலையில், வரத்து கணிசமாக குறைந்ததால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

சில மாதங்களுக்கு முன், 2,200 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை இஞ்சி (55 கிலோ), தற்போது, 500 ரூபாய் அதிகரித்து, 2,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஊறுகாய்க்கு பயன்படுத்தும் மா. இஞ்சி ஒரு மூட்டை, 2,500 ரூபாய்க்கு விற்றது. இது, தற்போது, தரத்தின் அடிப்படையில் 800 ரூபாய் வரை உயர்ந்து, 3,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஈரோடு, இஞ்சி கமிஷன் மண்டி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால், இஞ்சி உற்பத்தி பாதிப்படைந்துஉள்ளது.மசாலா, ஊறுகாய் தயாரிப்பு, சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில், இஞ்சிக்கான பயன்பாடு அதிகரித்துஉள்ளது.இந்நிலையில், அதன் வரத்து குறைந்து, தேவை அதிகம் உள்ளதால், விலையும் உயர்ந்து விட்டது. இதன் விலை, மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)