பதிவு செய்த நாள்
20 நவ2012
01:48
புதுடில்லி: ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், விற்பனை செய்த, 11,500 "சி.பி.ஆர் 250 ஆர்' மோட்டார் சைக்கிள்களில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்னைகளை பழுது நீக்கித் தருவதாக அறிவித்துள்ளது.சென்ற 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையில், இந்நிறுவனம், இந்தியாவில் தயாரித்த "சி.பி.ஆர் 250ஆர்' வகை மோட்டார் சைக்கிள்களில், பிரேக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது."வாரண்டி' காலத்தை கணக்கில் கொள்ளாமல், இலவசமாக பழுது நீக்கித் தர, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், வாடிக்கையாளர்களிடம் திருப்தியை ஏற்படுத்தும் வகையிலும், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்ற 2011ம் ஆண்டு, மூன்றாம் தலைமுறைக்கான ஹோண்டா சிட்டி காரில், குறைபாடுடைய இன்ஜின்களை மாற்றி தருவதற்காக, இந்நிறுவனம், சர்வதேச அளவில், 57,853 கார்களை திரும்ப பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|