பதிவு செய்த நாள்
20 நவ2012
02:02
ஈரோடு: உள்நாட்டில் மிளகாய் வற்றல், 3 லட்சம் டன் இருப்புள்ள நிலையில், வரும் டிசம்பர் - ஜனவரியில், 11.50 லட்சம் டன் அளவிற்கு, மிளகாய் அறுவடையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், மிளகாய் வற்றல் விலை, கிலோ 50 ரூபாய் என்ற அளவிற்கு குறையும், என கோவை, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தின் முனைவர் அஜ்ஜன், சஜீனா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உலக மிளகாய் உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, 25 சதவீதமாக உள்ளது. கடந்த, 2011-12ம் நிதியாண்டில், 12.50 லட்சம் டன் மிளகாய் உற்பத்தியானது. இதில், ஆந்திரா, 30 சதவீதம், கர்நாடகா 30, ஒடிசா 9, தமிழகம் 8, மகாராஷ்டிரா ஒரு சதவீதம் மற்றும் இதர மாநிலங்கள் 18 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தன.தமிழகத்தில் கடந்த, 2010 - 2011ல், 21,690 டன் மிளகாய் உற்பத்தியானது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில், இதன் உற்பத்தி அதிகமாக உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மிளகாய் பயிரிடும் பரப்பளவில், 62 சதவீதமும், உற்பத்தியில், 37 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.இந்தியாவின் மிளகாய் வற்றல் ஏற்றுமதி, 2010-11ல், 2.40 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 1,536 கோடி ரூபாயாகும். சென்ற 2011-12ம் நிதியாண்டில், 2,144 கோடி ரூபாய் மதிப்பிலான, 2.41 லட்சம் டன் மிளகாய் வற்றல் ஏற்றுமதியானது.உள்நாட்டில் இருந்து மிளகாய்த்தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய், மிளகாய் பேஸ்ட், சீவல் மிளகாய் என, பல வடிவில், இலங்கை, அமெரிக்கா, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாட்டின் மிளகாய் வற்றல் ஏற்றுமதியில், மலேசியா 26 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
இதையடுத்து, இலங்கை 19, வங்கதேசம் 17, அமெரிக்கா 14, பிற நாடுகள் 16 சதவீத
பங்களிப்பை கொண்டுள்ளன.பொரும்பாலும், மிளகாய் ஏற்றுமதியை பொறுத்தே அதன் விலை இருக்கும். நடப்பாண்டு ஏற்றுமதி குறையும் நிலையில், இதன் விலை மேலும் சரிவடைய வாய்ப்புள்ளது.
ஆந்திராமத்தியப் பிரதேசத்தில் அறுவடை துவங்கி, 70 லட்சம் மூட்டைகள், குண்டூர் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில், 45-60 கிலோ கொண்ட, 60 லட்சம் மிளகாய் வற்றல் மூட்டைகள் இருப்பில் உள்ளன. இங்கு, 1.20 லட்சம் ஹெக்டேரில், மிளகாய் விளைவிக்கப்படுகிறது.இந்தியாவில், மூன்று லட்சம் டன் மிளகாய் வற்றல் இருப்பில் உள்ளது. இதனால், வரும் மாதங்களில் மிளகாய் விலை குறைய வாய்ப்புள்ளது.மிளகாய் வற்றல் கெடாமல், குளிர்சாதன கிடங்கில், 8 - 10 மாதம் வரை சேமித்து வைக்கலாம்.
தமிழகத்தில் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் மிளகாய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, பிப்ரவரி - மார்ச் மாதம் அறுவடை செய்யப்படுகிறது. இதையடுத்து, ஏப்ரல் - மே மாதங்களில், இதன் வரத்து
அதிகரிக்கும்.வரும் 2013ல் ஒரு கிலோ மிளகாய் வற்றல் விலை, 50 ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் மிளகாய் விதைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|