இருப்பு அதிகரிப்பால் மிளகாய் வற்றல் விலை குறைய வாய்ப்புஇருப்பு அதிகரிப்பால் மிளகாய் வற்றல் விலை குறைய வாய்ப்பு ... சர்க்கரை உற்பத்தி 10 லட்சம் டன்னாக அதிகரிப்பு சர்க்கரை உற்பத்தி 10 லட்சம் டன்னாக அதிகரிப்பு ...
வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2012
02:03

புதுடில்லி: பொது துறை வங்கிகளிடையே அதிகரித்துள்ள போட்டியால், வீடு,வாகன கடன்களுக்கான வட்டி மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், வீட்டு வசதிக் கடன் பெற்றவர்கள், அக்கடனை ஒழுங்காக திரும்ப செலுத்தி வருவதால், இப்பிரிவில், பொது துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அளவும் குறைந்துள்ளது.பன்னாட்டு நிதி நெருக்கடியின் தாக்கத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. தொழில் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், மிகப் பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதும் குறைந்துள்ளது.இத்தகைய போக்கை சமாளிக்கும் பொருட்டு, வங்கிகள், சில்லரை கடன் பிரிவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளன. குறிப்பாக, வீட்டு வசதி, தனிநபர், வாகனம், ஆகியவற்றுக்கான கடன்களை அதிக அளவில் வழங்க முடிவு செய்துள்ளன.இந்நடவடிக்கைகளின் மூலம், வங்கிகள் அவற்றின் கடன் இலக்கை எட்ட முயற்சி மேற்கொண்டுள்ளன.இந்தவகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), அண்மையில் அதன் அடிப்படை வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 9.75 சதவீதமாக
நிர்ணயித்துள்ளது.அது போன்று, முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதமும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 14.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்துடன், வீட்டு வசதி கடனுக்கான வட்டியையும் எஸ்.பீ.ஐ., குறைத்துள்ளது. இதன்படி, 30 லட்ச ரூபாய் வரையிலான வீட்டு வசதி கடன்களுக்கு 10 சதவீதமும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 10.15 சதவீத வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வங்கியை தொடர்ந்து, பல வங்கிகள் பண்டிகை கால சலுகைத்திட்டங்களில் ஒன்றாக, வீட்டு வசதிக் கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளன.வங்கிகளை பொறுத்தவரை, பெரிய நிறுவனங்களுக்கு மொத்தமாக வழங்கும் கடனுடன்
ஒப்பிடும் போது, சில்லரை கடன்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.எனினும், இப்பிரிவில் இடர்பாட்டின் அளவும் குறைவாகவே இருப்பதால், வங்கிகள் இவ்வகை கடன்களில் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தபோதிலும், கடன் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ஆண்டு துவக்கத்தில், வங்கிகளின் சில்லரை கடன் வளர்ச்சி 18-20 சதவீதம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. இது, தற்போது 15-16 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.சில்லரை கடன் பிரிவில், வசூலாகாத கடனுக்கென, குறைந்த அளவிலான தொகையை மட்டுமே ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால், இவ்வகை கடன்களை வழங்குவதில் வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.தற்போது, வங்கிகளின் மொத்த கடனில், சில்லரை கடனின் பங்களிப்பு 16-20 சதவீதமாக உள்ளது. இப்பிரிவின் வட்டி விகிதத்தை வங்கிகள் மேலும் குறைக்கும் பட்சத்தில், அவற்றின் நிகர வட்டி வருவாய் குறையும்.இதை சமாளிக்க, டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தையும் வங்கிகள் குறைக்கும் என, முன்னணி வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பல வங்கிகளிடம் உபரி நிதி உள்ளதால், 8.5-9 சதவீத வட்டி கிடைக்கும் வர்த்தக ஆவணங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதை விட, கூடுதல் வட்டியை ஈட்டித் தரும் சில்லரை கடன் பிரிவில் முதலீடு செய்யும் என, அவர் மேலும் கூறினார்.இதனிடையே, பொது துறை வங்கிகளின் வசூலாகாத கடன் உயர்ந்துள்ள போதிலும், வீட்டு வசதி கடன் பிரிவில் வசூலாகாத கடன் குறைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.வட்டி மற்றும் மாதாந்திர தவணை தொகை குறைவாக உள்ளது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.வீட்டு வசதி கடன் பிரிவில், 10-25 லட்ச ரூபாய் வரையிலான கடனின், பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது. பெரும்பாலான வீட்டு வசதி கடன் பிரிவுகளில் பெரும்பாலானவற்றில், வசூலாகாத கடன் அளவு குறைந்துள்ளது.ஆனால், 2 லட்ச ரூபாய் வரையிலான வீட்டு வசதி கடனின் அளவும், திரும்ப வசூலாகாத தொகையும் அதிகமாக உள்ளது.மத்திய அரசு, வீட்டு வசதி கடனுக்கான வட்டியில், 1 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்கிறது. இதற்காக, ஒதுக்கப்பட்ட, 400 கோடி ரூபாயில், 200 கோடி ரூபாய் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இது தவிர, கடன் இடர்பாட்டு உறுதி நிதி அறக்கட்டளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த அமைப்பு, வீட்டு வசதி கடனில், வசூலாகாத தொகைக்கு உறுதி அளிக்கிறது. இதன்படி, 2 லட்ச ரூபாய் வரையிலான கடனில், 90 சதவீதமும், 2-5 லட்ச ரூபாய் வரையிலான கடனில், 85 சதவீதமும் வழங்குவதாக, இந்த அமைப்பு, வங்கிகளுக்கு உறுதி அளிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)