வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைகிறதுவீடு, வாகன கடனுக்கான வட்டி குறைகிறது ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
சர்க்கரை உற்பத்தி 10 லட்சம் டன்னாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2012
02:08

புதுடில்லி: நடப்பு 2012-13ம் சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), சென்ற 15ம் தேதி வரையிலுமாக, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 9.84 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற பருவத்தின், இதே காலத்தில், 7.76 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பயன்பாட்டிலும், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.சென்ற 15ம் தேதி வரையிலுமாக, மேற்கொள்ளப்பட்ட சர்க்கரை உற்பத்தியில், கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பு, 27 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக, மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அதிக அளவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன.இருப்பினும், இம்மாநிலங்களில், கரும்பு விலை நிர்ணயம் செய்வதில், ஏற்பட்ட பிரச்னையால், குறைந்த அளவிலேயே சர்க்கரை ஆலைகள் செயல்படத் துவங்கியுள்ளன. இதனால், இம்மாநிலங்களின் சர்க்கரை உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நடப்பு சர்க்கரை பருவத்தில், சென்ற 15ம் தேதி வரையிலுமாக, உத்தபிரதேசத்தில் மூன்று, மகாராஷ்டிராவில், 93, கர்நாடகாவில், 49 என, நாடு தழுவிய அளவில், 178 ஆலைகள், சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. சென்ற பருவத்தின், இதே காலத்தில், 215 ஆலைகள் இதன் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு பருவத்தில், தாமதமான மழைப் பொழிவால், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில், கரும்பு சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது.இதன் விளைவாக, ஒட்டுமொத்த அளவில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு பருவத்தில், 2.40 கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (2.60 கோடி டன்) விட, 8 சதவீதம் குறைவாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)