பதிவு செய்த நாள்
22 நவ2012
00:03
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின், முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கியதை அடுத்து, "சென்செக்ஸ்', கடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு, 0.72 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.
மேலும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்று நடை பெற்ற பங்கு வியாபாரத்தில்,நுகர் பொருட்கள், ரியல் எஸ்டேட்,நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைக ளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், மோட்டார் வாகனம் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 131.06 புள்ளிகள் அதிகரித்து, 18,460.38 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,478.50 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,309.81 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சிப்லா, சன்பார்மா, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 43.25 புள்ளிகள் உயர்ந்து, 5,614.80 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,620.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,561.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|