"2ஜி' ஏலம் நிர்ணய தொகை மிக அதிகம்: மான்டேக் சிங்"2ஜி' ஏலம் நிர்ணய தொகை மிக அதிகம்: மான்டேக் சிங் ... ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2012
00:05

மாமல்லபுரம்:வங்கிகளில் தற்போது புழக்கத்தில் உள்ள காசோலை ரத்து செய்யப்படுவ தால், பாதுகாப்பு அம்சங் கள் கொண்ட புதிய காசோலையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவித்துள் ளன. இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப் பாட்டில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன.
பாதுகாப்பு:இவற்றில் கணக்கு துவங்கி, கோடிக்கணக்கானோர் வாடிக்கையாளராக உள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து, வேறொருவருக்கு தொகை வழங்கும் பயன்பாட்டிற்காக, வங்கிகள் காசோலை வழங்கு கின்றன. தற்போது, ஒவ்வொரு வங்கியும், விருப்பத்திற்கேற்ற வகையில், வெவ்வேறு வண்ணத்தில் காசோலை
அச்சிட்டு வழங்கி வருகின்றன.
இத்தகைய காசோலைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, அதிநவீன பாதுகாப்பு கொண்ட, "சி.டி.எஸ். 2010' தர காசோலையை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இவ்வகை காசோலை ஒரே விதமாக, அனைத்து வங்கிகளிலும் பயன்படுத்தப்படும். இது, தற்போதைய காசோலையின் அளவிலேயே இருக்கும். இவை, புற ஊதாக்கதிர்களில் ஒளிராது.ரூபாய் நோட்டில் இருப்பதை போன்ற, நீர்க்குறி இடம் பெற்றி ருக்கும். அதில் சி.டி.எஸ்.இந்தியா என பொறித்து, புற ஊதா மையில், வங்கியின் சின்னம் அச்சிடப் பட்டிருக்கும்.
நடைமுறைகாசோலையில் எழுதியதை, ரசாயன பொருட்கள் மூலம் திருத்தியிருந்தாலோ, வேறு வகையில் மாற் றம் செய்திருந்தாலோ எளிதில் கண்டறிய முடியும். வாடிக்கையாளர்களுக்கு இவ்வகை காசோலையை விரைந்து வழங்கி, உடனே நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள் ளது. வரும் ஜனவரி மாதம் முதல், புதிய வகை காசோலை மட்டுமே செல்லத்தக்கது.
எனவே, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பொதுத் துறை வங்கிகள், கரூர் வைஸ்யா பேங்க் உட்பட தனியார் வங்கி கள், இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. காலக்கெடுதற்போதைய காசோலைகள் டிசம்பர் 31ம் தேதி வரையே செல்லத்தக்கது என்பதால், வாடிக்கையாளர்கள் கைவசம் உள்ள காசோலைகளை வங்கியில் அளித்து, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)