பதிவு செய்த நாள்
22 நவ2012
00:05
மாமல்லபுரம்:வங்கிகளில் தற்போது புழக்கத்தில் உள்ள காசோலை ரத்து செய்யப்படுவ தால், பாதுகாப்பு அம்சங் கள் கொண்ட புதிய காசோலையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவித்துள் ளன. இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப் பாட்டில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன.
பாதுகாப்பு:இவற்றில் கணக்கு துவங்கி, கோடிக்கணக்கானோர் வாடிக்கையாளராக உள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து, வேறொருவருக்கு தொகை வழங்கும் பயன்பாட்டிற்காக, வங்கிகள் காசோலை வழங்கு கின்றன. தற்போது, ஒவ்வொரு வங்கியும், விருப்பத்திற்கேற்ற வகையில், வெவ்வேறு வண்ணத்தில் காசோலை
அச்சிட்டு வழங்கி வருகின்றன.
இத்தகைய காசோலைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, அதிநவீன பாதுகாப்பு கொண்ட, "சி.டி.எஸ். 2010' தர காசோலையை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இவ்வகை காசோலை ஒரே விதமாக, அனைத்து வங்கிகளிலும் பயன்படுத்தப்படும். இது, தற்போதைய காசோலையின் அளவிலேயே இருக்கும். இவை, புற ஊதாக்கதிர்களில் ஒளிராது.ரூபாய் நோட்டில் இருப்பதை போன்ற, நீர்க்குறி இடம் பெற்றி ருக்கும். அதில் சி.டி.எஸ்.இந்தியா என பொறித்து, புற ஊதா மையில், வங்கியின் சின்னம் அச்சிடப் பட்டிருக்கும்.
நடைமுறைகாசோலையில் எழுதியதை, ரசாயன பொருட்கள் மூலம் திருத்தியிருந்தாலோ, வேறு வகையில் மாற் றம் செய்திருந்தாலோ எளிதில் கண்டறிய முடியும். வாடிக்கையாளர்களுக்கு இவ்வகை காசோலையை விரைந்து வழங்கி, உடனே நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள் ளது. வரும் ஜனவரி மாதம் முதல், புதிய வகை காசோலை மட்டுமே செல்லத்தக்கது.
எனவே, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பொதுத் துறை வங்கிகள், கரூர் வைஸ்யா பேங்க் உட்பட தனியார் வங்கி கள், இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. காலக்கெடுதற்போதைய காசோலைகள் டிசம்பர் 31ம் தேதி வரையே செல்லத்தக்கது என்பதால், வாடிக்கையாளர்கள் கைவசம் உள்ள காசோலைகளை வங்கியில் அளித்து, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|