பதிவு செய்த நாள்
22 நவ2012
00:06
போதிய அளவிற்கு இரும்புத் தாது கிடைக்காததாலும், இதன் விலை உயர்ந்துள்ளதாலும், உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தியை குறைத்து உள்ளன.உள்நாட்டில், உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்களுக்கு, போதிய அளவிற்கு, இரும்புத் தாது கிடைக்காததால், இந்நிறுவனங்கள் அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 70 சதவீத அளவிற்கே செயல்படுவதாக தெரிவித்துள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, முகந்த் மற்றும் கல்யாணி ஸ்டீல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான, ஹோஸ்பெட் ஸ்டீல்ஸ், உருக்கு உற்பத்தி திறனை கணிசமாக குறைத்துள்ளது.
பணியாளர்கள்:பொதுவாக, இந்நிறுவனம், ஆண்டுக்கு, 7 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், போதிய அளவிற்கு, இரும்புத்தாது கிடைக்காததால், இந்நிறுவனத்தின் மூன்று உருக்காலைகளில், இரண்டு ஆலைகள் மட்டுமே இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது.இதே நிலை நீடித்தால், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட நேரிடும் என, இந்நிறுவனம், தெரிவித்துள் ளது.
இந்நிறுவனம் தவிர, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனமும், அதன் உற்பத்தி திறனை, நடப்பு மாதத்தில், 80 சத வீதத்திலிருந்து, 70 சதவீதமாக குறைத்துள்ளது. இரும்புத் தாது, கிடைக்காத நிலையில், உற்பத்தி திறன், 50 சத வீதமாக குறைக்கப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இழப்பு:இது குறித்து, கல்யாணி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே.கோயல் கூறியதாவது: இரும்புத் தாது கிடைக்காததால், எங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது. வங்கி களின் நிதி உதவி வாயிலாக, இழப்பு ஈடு கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதே நிலை நீடித்தால், உருக்கு உற்பத்தி பாதிப்புக்கு
உ ள்ளாகும்.
இதுவரை, பணியாளர்கள் எவரையும் பணிநீக்கம் செய்யவில்லை. இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.என்.எம்.டீ.சி., நிறுவனம்இந்நிலையில், இரும்புத் தாது அளித்து வரும், என்.எம்.டீ.சி., நிறுவனம், இரும்புத் தாதுவின் விலையை உயர்த்தியுள்ளது. ஏற்றுமதிக்கான, ஒரு டன் இரும்புத் தாது விலை, 120 டாலர் (6,610 ரூபாய்) என்ற அளவில் உள்ளது.இந்நிறுவனம், ஒரு டன் இரும்புத் தாதுவை,உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்கு, 2,610 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக, என்.எம்.டீ.சி., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும், "செயில்' நிறுவனத்தின் தலைவருமான சி.எஸ். வர்மா தெரிவித்தார்.
ஏற்றுமதி:என்.எம்.டீ.சி., நிறுவனம் அதன் மொத்த இரும்புத் தாது உற்பத்தியில், 5 சதவீதத்தை மட்டுமே ஏற்றுமதி செய்வதாக தெரிவித்துள்ளது.உருக்கு நிறுவனங்களுக்கு, இரும்புத் தாது கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. கையிருப்பில் இருந்த, இரும்புத் தாது அனைத்தும் தீர்ந்து விட்டது. இனி, புதிதாக இரும்புத் தாது கிடைத்தால் மட்டுமே, உருக்கு ஆலைகளை இயக்க முடியும் என, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின், இணை நிர்வாக இயக்குனரும், குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியுமான, சேஷகிரி ராவ் தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள உருக்கு நிறுவனங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 25 லட்சம் டன் இரும்புத் தாது தேவைப் படுகிறது. ஆனால், இந்நிறுவனங்களுக்கு, இரும்புத் தாது போதிய அளவிற்கு கிடைப்பதில்லை என, கூறப் படுகிறது.
இரும்பு தாது ஏற்றுமதி :சென்ற அக்டோபர் மாதத்தில், இந்தியாவிலிருந்து,2.81 லட்சம் டன்,இரும்புத் தாது ஏற்றும தியாகியுள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத, மிக குறைந்த அளவாகும் என, லண்டனை சேர்ந்த மெக் கொயர் குழுமத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு முதல் இது வரையி லுமாக, இந்தியாவின் இரும்புத் தாது ஏற்றுமதி, 55 சதவீதம் சரிவடைந்து, 3.20 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.
வரும் 2013ம் ஆண்டில், இந்தியாவின் இரும்புத் தாது ஏற்றுமதி, 2.50 கோடி டன்னாக சரிவடையக் கூடும் என, இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு 2012ம் ஆண்டில், இந்தியாவின் இரும்புத் தாது ஏற்றுமதி, 3.80 கோடி டன்னாக இருக்கும். இது, கடந்த ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட மொத்த ஏற்றுமதியில், பாதி அளவுதான் என, இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|