பதிவு செய்த நாள்
24 நவ2012
16:25
வாகன புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பல வகையிலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கத் தொடங்கியதால் இன்று அரசாங்கமும் வாகன உற்பத்தி நிறுவனங்களும் முறையே சட்டத்திட்டங்களையும், தொழில் நுட்பங்களையும் புகுத்தி மாசுக்கட்டுபாட்டை கொண்டு வந்துள்ளன. வாகன புகையின் மாசுக்கட்டுப் பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்னவென்று பார்ப்போம்.
1991-ம் ஆண்டு பெட்ரோல் என்ஜின்களுக்கும் 1992-ம் ஆண்டு டீசல் என்ஜின்களுக்கும் என்று மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் கொண்டுவரப்பட்டதின் விளைவாய் "காட்டலிடிக் கன்வர்டர்' கார்களில் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் ""அன்லெட்டட் பெட்ரோல்' புகுத்தப்பட்டதும் பெட்ரோல் வாகனங்களில் 61% மற்றும் டீசல் வாகனங்களில் 85 சதவிகிதமும் மாசு குறைந்தது.
எரிபொருள் தரமும் மாசுக்கட்டுப்பாட்டிற்கு வழி வகுக்கும் என்பதால் 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் பெட்ரோலில் பென்சீன் அளவு அதிக பட்சமாக 3 சதவிகிதமும் 0.05% சல்பர் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசலில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு மேலும் சிறப்புற்றது. வாகன உற்பத்தியாளர்கள் சி.என்.ஜி., எல்.பி.ஜி., எரிபொருள் உபயோக என்ஜின்களை பொருத்த தொடங்கியதும் எரிபொருள் மூலம் ஏற்படும் மாசை குறைந்தது. சரியாக பராமரிக்கப்படாத வாகனங்களும், மிகப்பழைய வாகனங்களும் அதிக புகையையும் எரிக்கப்படாத எரிபொருள் வாயுக்களையும் வெளியிடும் என்பதால் பி.யு.சி.(PUC), என்ற பொல்யூசன் அன்டர் கண்ட்ரோல் என்ற தரச்சான்றிதழை ஒவ்வொரு வாகனத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதும் மாசுக்கட்டுப் பாட்டிற்கு நல்ல பலன் அளிக்கிறது.சாலைகளின் பராமரிப்பும், போக்குரவத்து மேளாண்மையும் கூட வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை அதிகப்படுத்தி எரிபொருள் வீணாக வழிவகுக்கும் என்பதால் நல்ல உறுதியான மேடு பள்ளமற்ற சாலைகளும் சரியான போக்குவரத்து வசதிகளும் இருந்தால் வாகன மாசுக்கட்டுப்பாட்டை முழுமையாக கொண்டு வரலாம் என்பதே உண்மை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|