தங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.304 உயர்வுதங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.304 உயர்வு ... நாட்டின் அன்னிய செலாவணி ; கையிருப்பு ரூ.165 கோடி குறைவு நாட்டின் அன்னிய செலாவணி ; கையிருப்பு ரூ.165 கோடி குறைவு ...
வாகன புகையும், மாசுக்கட்டுப்பாடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2012
16:25

வாகன புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பல வகையிலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கத் தொடங்கியதால் இன்று அரசாங்கமும் வாகன உற்பத்தி நிறுவனங்களும் முறையே சட்டத்திட்டங்களையும், தொழில் நுட்பங்களையும் புகுத்தி மாசுக்கட்டுபாட்டை கொண்டு வந்துள்ளன. வாகன புகையின் மாசுக்கட்டுப் பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்னவென்று பார்ப்போம்.
1991-ம் ஆண்டு பெட்ரோல் என்ஜின்களுக்கும் 1992-ம் ஆண்டு டீசல் என்ஜின்களுக்கும் என்று மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் கொண்டுவரப்பட்டதின் விளைவாய் "காட்டலிடிக் கன்வர்டர்' கார்களில் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் ""அன்லெட்டட் பெட்ரோல்' புகுத்தப்பட்டதும் பெட்ரோல் வாகனங்களில் 61% மற்றும் டீசல் வாகனங்களில் 85 சதவிகிதமும் மாசு குறைந்தது.
எரிபொருள் தரமும் மாசுக்கட்டுப்பாட்டிற்கு வழி வகுக்கும் என்பதால் 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் பெட்ரோலில் பென்சீன் அளவு அதிக பட்சமாக 3 சதவிகிதமும் 0.05% சல்பர் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசலில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு மேலும் சிறப்புற்றது. வாகன உற்பத்தியாளர்கள் சி.என்.ஜி., எல்.பி.ஜி., எரிபொருள் உப‌யோக என்ஜின்களை பொருத்த தொடங்கியதும் எரிபொருள் மூலம் ஏற்படும் மாசை குறைந்தது. சரியாக பராமரிக்கப்படாத வாகனங்களும், மிகப்பழைய வாகனங்களும் அதிக புகையையும் எரிக்கப்படாத எரிபொருள் வாயுக்களையும் வெளியிடும் என்பதால் பி.யு.சி.(PUC), என்ற பொல்யூசன் அன்டர் கண்ட்ரோல் என்ற தரச்சான்றிதழை ஒவ்வொரு வாகனத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதும் மாசுக்கட்டுப் பாட்டிற்கு நல்ல பலன் அளிக்கிறது.சாலைகளின் பராமரிப்பும், போக்குரவத்து மேளாண்மையும் கூட வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை அதிகப்படுத்தி எரிபொருள் வீணாக வழிவகுக்கும் என்பதால் நல்ல உறுதியான மேடு பள்ளமற்ற சாலைகளும் சரியான போக்குவரத்து வசதிகளும் இருந்தால் வாகன மாசுக்கட்டுப்பாட்டை முழுமையாக கொண்டு வரலாம் என்பதே உண்மை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)