கவரிங் நகைகளின் சந்தை மதிப்பு; ரூ.15 ஆயிரம் கோடியாக உயரும்  கவரிங் நகைகளின் சந்தை மதிப்பு; ரூ.15 ஆயிரம் கோடியாக உயரும் ... தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.24,480க்கு விற்பனை தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.24,480க்கு விற்பனை ...
பெட்ரோலில் 5 சதவீத எத்தனால் கலப்பது கட்டாயமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2012
07:31

புதுடில்லி: பொது துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கண்டிப்பாக பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ.,), ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான அரசாணை வெளியான பின், நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கட்டாயம் கலந்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு, கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.இதன்படி,வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான், நிகோபார், லட்சத்தீவு ஆகியவை நீங்கலாக, 19 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தின் கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 105 கோடி லிட்டர் எத்தனால் தேவை என, மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில், சர்க்கரை ஆலைகளுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் இடையே, எத்தனால் கொள்முதல் விலை தொடர்பான பிரச்னையால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.அதனால், எத்தனால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுமித்ரா சவுத்ரி தலைமையிலான குழுவை, சி.சி.இ.ஏ., அமைத்தது.இக்குழு, இடைக்கால ஏற்பாடாக, ஒரு லிட்டர் எத்தனால் கொள்முதல் விலையை, 27 ரூபாயாக நிர்ணயித்தது.எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனைக்கு தேர்வு செய்யப்பட்ட, 19 மாநிலங்களில், 13 மாநிலங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.அதிலும், ஆண்டுக்கு, 44 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.நிர்ணயித்த இலக்குப்படி, எத்தனாலை கொள்முதல் செய்யாத எண்ணெய் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.இருந்தபோதிலும், எத்தனால் கலப்பு பிரச்னையில், மத்திய அரசின் தெளிவற்ற போக்கு காரணமாகவே, இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செலவினத்தை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றில் ஒன்றாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சி.சி.இ.ஏ.,வின் ஒப்புதலை அடுத்து, பெட்ரோலிய அமைச்சகம், விரைவில் அரசாணை வெளியிட உள்ளது. மேலும், எத்தனால் விலை, கொள்முதல் ஆகியவை தொடர்பான ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட உள்ளன.இதையடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை நடைமுறைக்கு வரும்.எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையின் வாயிலாக, எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.
இந்நிலையில், எத்தனால் கலப்பு திட்டத்திற்கு, ரசாயன துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலப்பதால், பல்வேறு ரசாயன பொருட்களுக்கு தேவையான எத்தனாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும், இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, "கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில், 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. மதிப்பீட்டின்படி, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 105 கோடி லிட்டர் எத்தனால் தான் தேவைப்படும். அதனால், எத்தனாலுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை' என்று தெரிவித்தார்.அப்படியே பற்றாக்குறை ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்கள், எத்தனாலை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என, அவர் மேலும் கூறினார்.

*பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் இறக்குமதி செலவு குறையும்

*சர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவா# கிடைக்கும்

*எத்தனால் கலந்த பெட்ரோலில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவு

*வாகனங்களுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும்

*2010-11ம் நிதியாண்டில் 220 @காடி லிட்டர் எத்தனால் உற்பத்தி öŒ#யப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)